Skip to main content

பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மையப்படுத்தி தேர்தலைச் சந்திப்போம்! - காங்கிரஸ்

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், கடந்த 14 ஆண்டுகளாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் இருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னிறுத்தி வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Congress

 

மேலும், ஆளும் சிவராஜ் சிங் சவுகானை கோஸ்நவீர் (வெற்று வாக்குறுதிகளின் நாயகன்) எனவும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கே.கே.மிஷ்ரா, ‘சிவராஜ் சிங் சவுகானின் பன்னிரெண்டு ஆண்டுகால ஆட்சியில், கிட்டத்தட்ட 13ஆயிரம் தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். அதில் 9,500 வாக்குறுதிகளை இதுவரையில் அவர் நிறைவேற்றவேயில்லை. அவையெல்லாம் வெறும் வாய்மொழியில் சென்றுவிட்டதால், அவரை கோஸ்நவீர் என அழைக்க இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

 

மத்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த கோலராஸ் மற்றும் முங்கோலி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது ஆட்சி மாற்றத்துக்கான விதை என காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. 

 

2003ஆம் ஆண்டு ம.பி. சட்டமன்றத் தேர்தலின்போது, அப்போது முதல்வராக இருந்த திக்விஜய் சிங்கை (காங்கிரஸ்) மிஸ்டர் பண்டதார் (கெட்டுப்போனவர்) என பா.ஜ.க.வினர் அழைத்தனர். தற்போது சிவராஜ் சிங் சவுகானை அதேபோல கோஸ்நவீர் என்று அழைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Income tax notice to Congress, Communist Party of India

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Income tax notice to Congress, Communist Party of India

இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.