Skip to main content

பிரதமர் தமிழகம் வருவதாக உறுதி அளிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
eps



பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று (22.11.2018) காலை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். 
 

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 
 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஜா புயலால் கடும் சேதம் அடைந்துள்ளது. அதற்கு தேவையான நிதியை பெறுவதற்காக பிரதமரை இன்று காலை சந்தித்தோம். புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை தெரிவித்தோம். 
 

தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக 1500 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக மத்திய குழு பார்வையிட்டு, சேத விவரங்களை கணக்கிட்டு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன். 
 

பிரதமர் உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைத்து சேத பகுதிகளை பார்வையிட செய்வதாக கூறினார். விரைவில் மத்திய குழு புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். 
 

பொதுவாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர்கள் வந்து பார்வையிடுவார்கள். அண்மையில் கேரளாவில் வெள்ளப் பாதிப்புகளை மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டார்கள். ஆனால் தமிழகத்திற்கு யாரும வரவில்லையே?
 

எங்களைப் பொறுத்தவரையில் கஜா புயல் வருவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாங்கள் எடுத்தோம். கிட்டதட்ட 82 ஆயிரம் பேரை முகாம்களில் தங்க வைத்து பாதுகாத்தன் விளைவாக பொதுமக்களின் பாதிப்பு குறைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்தந்த மாவட்ட அமைச்சர்களை அங்கேயே தங்கி புயல் வருதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. கஜா புயல் வருவது குறித்து தலைமைச் செயலகத்தில் இரண்டு முறை என் தலைமையில் துணை முதல் அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மூத்த ஆட்சிப் பணியாளர்களுடன் ஆலோசனை நடைப்பெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை வழங்கப்பட்டது. மூத்த ஆட்சிப் பணியாளர்களை முன்கூட்டியே அந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசை பொறுத்தவரைக்கும் கஜா புயலால் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
 

இதில் மத்திய அரசின் ரோல் என்ன?
 

அதாவது எங்களுடைய பணிகளைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன். மத்திய அரசு பணிகளை நீங்க அவர்களிடம்தான் கேட்க வேண்டும். 
 

கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டவுடனேயே அதிகாரிகளை அந்தெந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்து, சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு அதனை தற்போது பிரதமரிடம் அளித்துள்ளோம். தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்கிறது. அதனால்தான் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 
 

பிரதமர் தமிழகம் வருவதாக கூறினாரா?
 

அதுபற்றி எந்த உறுதியும் அளிக்கவில்லை. முதல் கட்டமாக மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். 
 

இவ்வாறு கூறினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story

திருச்சி தொகுதி அதிமுக சீட் யாருக்கு? - உச்சத்தில் விஜயபாஸ்கர் - தங்கமணி மோதல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

Trichy Constituency ADMK seat for whom? Vijayabaskar - Thangamani conflict at the peak!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி யாருக்கு என்ற முட்டல் மோதல்கள் பலமாக உள்ளதாம். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் ஆர்.வி. பரதன், தனக்கு திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதி கொடுத்தால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் ஆட்கள் கட்சிக்காக வேலை செய்வார்கள் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கையோடு போக, திருச்சி தொகுதிப் பொறுப்பாளரான மாஜி தங்கமணியும் ஆமோதித்துள்ளார். ஆனால் திருச்சி தொகுதியை கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் கரிகாலனின் சகோதரரான புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையாவுக்கே கொடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வடக்கு மா.செ. விஜயபாஸ்கர் மதியம் வரை எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான், திருச்சியை தங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒதுக்குவது வரை போன எடப்பாடி, தேமுதிகவுக்கு தஞ்சை தொகுதியை கொடுத்துவிட்டு திருச்சியை நிலுவையில் வைத்துள்ளார். தொகுதிப் பொறுப்பாளரான தான் பரிந்துரை செய்த வேட்பாளருக்கு சீட் கிடைக்கவிடாமல் தான் பரிந்துரைக்கும் பாசறை கருப்பையாவுக்கு சீட் வாங்க மோதும் விராலிமலை விஜயபாஸ்கரிடம், உங்கள் பொறுப்பு தொகுதியை மட்டும் கவனியுங்கள். என் பொறுப்பு தொகுதிக்குள் வரவேண்டாம் என்று தங்கமணி விராலிமலை விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி தொகுதி சீட்டுக்காக அதிமுக மாஜிக்களின் மோதல்கள் உச்சத்தில் இருப்பதால் விடியும்போது சீட் யாருக்கு என்று முடிவெடுப்பார் எடப்பாடி என்கிறார்கள் விவரமறிந்த ர.ர.க்கள். பரதனிடம் பேசிய எடப்பாடி, நாளைய விடியல் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை கூறி இருப்பதாகவும் பேசுகின்றனர். அதே நேரத்தில் மா.செ. விஜயபாஸ்கர், சீட் எனக்குத்தான் வாங்கித் தருவார் நான் தான் வேட்பாளர் என்று கட்சியினரிடம் சொல்லி வாழ்த்துகளையும் பெற்று வருகிறார் பாசறை கருப்பையா.