Skip to main content

திமுக கோட்டையாகவே தொடருமா ஆத்தூர் தொகுதி..? 

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

Dindugal constituency dmk pmk



ஆத்தூர் தொகுதியைப் பொறுத்தவரை அனைத்துச் சமூகமும் நிறைந்த தொகுதியாக இருந்து வருகிறது. இத்தொகுதியில், திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஐ. பெரியசாமி ஆறாவது முறையாக தேர்தல் களத்தில் குதித்து இருக்கிறார். அதுபோல் அதிமுக கூட்டணியில் இருக்கும் பா.ம.க. சார்பில், அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா களமிறங்கியிருக்கிறார்.


திமுக:

இத்தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கும் ஐ.பெரியசாமி, தனது தொகுதியில் உள்ள அனைத்துச் சமூக மக்களுக்கும் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வது எனப் பணியாற்றிவருகிறார். கரோனா காலத்திலும் அத்தொகுதி மக்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அதுவே ஐ.பெரியசாமிக்கு பலமாக இருந்துவருகிறது. விவசாய மக்களுக்காக ஒரு கோடிவரை செலவுசெய்து கொடகனாறு மற்றும் குளங்களையும் தூர்வாரிக் கொடுத்திருக்கிறார். இப்படி அனைவரையும் அரவணைத்து தொகுதியை திமுக கோட்டையாகத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். அதனாலேயே ஆளுங்கட்சியான அதிமுக போட்டிப்போட அஞ்சி வருவதாகவும் அதனால், கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்கியது எனவும் இத்தொகுதி மக்கள் பேசிவருகின்றனர்.

பாமக:

 

Dindugal constituency dmk pmk


அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் திலகபாமா தொகுதியில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார். இருந்தாலும், கட்சி வளர்ச்சி என்பது பெயரளவில் இருப்பது பலவீனத்தைக் காட்டுகிறது. அப்படி இருந்தும் பாமக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் திலகபாமா களம் இறங்கிவருகிறார். அதேபோல் அதிமுக பொறுப்பாளர்கள் பங்களிப்பைக் கொடுக்காதது பலவீனத்தைக் காட்டுகிறது. இருந்தாலும் பாமக வேட்பாளர் திலகபாமா தொகுதியில் வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்.

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செல்வகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சைமன் ஜஸ்டின், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிவசக்திவேல், உள்பட சில கட்சிகள் களமிறங்கினாலும் கூட பெரியளவில் ஓட்டு வங்கிகளைப் பிரிக்க வாய்ப்பில்லை. அதனால், ஆத்தூர் தொகுதியை திமுக கோட்டையாக தக்க வைப்பார் ஐ.பெரியசாமி என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.