Skip to main content

தினகரனின் நாடகம் முடிவுக்கு வருகிறது : செந்தில் பாலாஜி விலகல் குறித்து வைகைச்செல்வன் பேட்டி

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
Vaigaichelvan



அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

இதுதொடர்பாக அதிமுக கொள்கைப்பரப்புச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் நக்கீரன் இணையதளத்திடம் கூறியதாவது,

 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல கட்சிகளுக்கு தாவியவர். பல கட்சி சாயங்களை பூசிக்கொண்டவர். சிந்தாந்த ரீதியாக கொள்கை ஈடுபாடோ, லட்சிய ஈடுபாடோ இல்லாத செந்தில் பாலாஜி, தனி நபர் வளர்ந்தால் போதும் என்று நம்புகிற ஒருவர். 

 

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லுவார்கள், ''தன்னுடைய வளர்ச்சியை மாத்திரமே நம்புகிறவர் அந்த இயக்கத்தின் புற்றுநோய் போல. மாறாக கட்சியினுடைய வளர்ச்சியை நம்பி தன்னை அதற்காக அர்ப்பணித்துக்கொள்பவர்களே நல்ல தொண்டர்கள்'' என்று சொல்லுவார். அதைப்போல ஒவ்வொரு கட்சிக்கும் பலபேர் இருப்பார்கள். அந்த வகை பட்டியலில் செந்தில் பாலாஜியும் அடங்குவார். 
 

அடிப்படையில் திமுகவிலும், மதிமுகவிலும் பின்னர் திமுகவிலும், அதன் பின்னர் அதிமுகவிலும், அதற்கு பின்னர் அமமுகவிலும், தற்போது திமுகவில் தஞ்சமடைந்திருக்கிறார். தன்னுடைய வளர்ச்சியை மாத்திரம் எண்ணுகிற இவரால் ஒருபோதும் கட்சி வளராது. 
 

அமமுக ஒரு கொள்கை பலம் இல்லாத ஒரு கட்சி. வெறும் ஒரு சிறு குழுவை வைத்துக்கொண்டு அதை கட்சியாக மாற்றலாம் என்று நினைத்ததால் தினகரன் தனது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். அவருடைய ஓரங்க நாடகம் ஒரு முடிவுக்கு வருகிறது. 

 

மன்னாரன் கம்பெனி அன்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற ஒரு கட்சியாக வைத்துக்கொண்டிருக்கிற தினகரன், ஜெயலலிதாவாலும் அதிமுகவாலும் வளர்ந்தவர். அதை மறந்துவிட்டு அதிமுகவை அழிக்க நினைத்ததும், அதிமுக அரசை கலைக்க நினைப்பதும், அவருடைய அரசியல் வாழ்வில் நம்பகத்தன்மையை இழந்துவிடுகிறார். 

 

பெற்றத் தாயையும், தகப்பனையும் விஷம் வைத்து கொல்லத் துடிக்கிற மகனைப்போல, தான் வளர்ந்த இயக்கத்தையே அழிக்க நினைக்கும் தினகரன் கட்சியில் இருப்பவர்கள் அந்த கட்சியையே அழிக்க நினைத்து அவரை விமர்சனம் செய்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவருகிறார்கள் என்பதைத்தான் செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் காட்டுகிறது. இவ்வாறு கூறினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

செந்தில் பாலாஜியின் மனு; அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
The court ordered the enforcement department! for Petition of Senthil Balaji

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது. எனவே, தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த போது, அந்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்தது. மேலும், ‘அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது. எனவே, செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Next Story

செந்தில் பாலாஜியின் மனு; அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு 

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Court order to enforcement department fot Petition of Senthil Balaji

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மேலும், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு இன்று (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ‘செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்’ என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை, அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு பதிவைத் தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று (20-02-24) நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.