Skip to main content

வேட்பாளர் லிஸ்ட்! -கூட்டணிக்கு வேட்டு வைப்பதா என சலசலப்பு!!!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020
ddd

 

 

எப்போது தேர்தல் அறிவித்தாலும் சந்திக்க தயார் என்று திமுகவும், அதிமுகவும் சொல்லி வருகிறது. அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும், தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐ-பேக்தான் தேர்ந்தெடுக்கும் என செய்திகள் கசிந்துள்ளன.

 

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேரைக் கொண்ட தி.மு.க. வேட்பாளர் பரிந்துரைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதை 3 பேர் பட்டியலாக்கும் வேலையும் நடக்குது. தி.மு.க.வில் சீட் வாங்க நினைக்கும் பலரும் ஐ-பேக் டீமை பிடிப்பதில் மும்முரமா இருக்காங்க. இதைப் புரிஞ்சிக்கிட்டு, ஐபேக் பட்டியலில் உங்கள் பெயரையும் இடம்பெறச் செய்கிறோம்னு அரசியலுக்கு அப்பாற்பட்ட கும்பல் ஒன்றும், வேட்பாளராகும் ஆசையில் உள்ள தி.மு.கவினரிடம் வருமானம் பார்க்க அலைகிறதாம்.

 

இந்த நேரத்தில், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும், அந்தந்த கட்சிகளிடம் தலா 3 பேர் கொண்ட பட்டியலை வாங்கி, நாமே தேர்ந்தெடுக்கலாம்ங்கிற யோசனையை ஐபேக்கின் பாஸான பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினிடம் சொல்லியிருப்பதா தகவல் கசிய, நல்லா இருக்கிற கூட்டணிக்கு வேட்டு வைப்பதான்னு தி.மு.க. சீனியர்களிடமும், கூட்டணியினரிடமும் சலசலப்பு ஏற்பட்டிருக்குது.

 

 

சார்ந்த செய்திகள்