உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டம் அஷ்ரஃப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால். இவருக்கு 19 வயதில் அன்ஷு என்ற மகள் இருந்தார். தனது மகள், வேறொரு நபருடன் உறவு வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் ராஜ்பாலுக்கு இருந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தினத்தன்று, தனது மகளை இரும்பு கம்பியால் அடித்து ராஜ்பால் கொலை செய்துள்ளார். இதனையடுத்து, ராஜ்பால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரின் அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த கிராமத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ராஜ்பால், மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அன்ஷுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.