Skip to main content

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி அறிவிப்பு...

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு  முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

rahul gandhi will file nomination on april 4 for wayanad constituency

 

இந்நிலையில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 4 ஆம் தேதி வயநாடு தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் அன்று ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியும் அவர் உடன் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்