காவல்நிலையத்திற்குள் நடனமாடிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!
காவல்நிலையத்திற்குள் நடனமாடிய காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலம், அசன்சோல் பகுதியில் உள்ளது ஹிராபூர். இந்தப் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பணியில் இருந்த அதிகாரிகள், பாலிவுட் பாடலைக் கேட்டு ரசித்துள்ளனர்.
அதில், கிருஷ்ண சாதன் மொண்டல் எனும் துணை ஆய்வாளர் உற்சாக மிகுதியால் எழுந்து நடனமாட, அதை சக அதிகாரி ஒருவர் படம் பிடிக்கிறார். கைதிகள் இருக்கும் லாக் - அப் முன் சப் - இன்ஸ்பெக்டர் நடனமாட, அதை பெண் காவலர்கள் கைகளைத் தட்டியபடியே ரசிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, விவகாரம் உயர் அதிகாரிகள் வரை சென்றுள்ளது.
இதையடுத்து, நடனமாடிய மொண்டல் மற்றும் அதைப் படம்பிடித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.