Skip to main content

ஆறுவயது சொந்த மகளை பெற்றோர்களே கொன்று நடுவீட்டில் புதைத்த சம்பவம்! பிரேதபரிசோதனையில் திடுக் தகவல்!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018

 

MURDER

 

 

 

உத்தரபிரதேசத்தில் ஆறுவயது சிறுமியை பெற்றோர்களே மர்மமாக கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் தாரா எனும் ஆறு வயது சிறுமி பெற்றோர்களால் கொலை செய்யப்பட்டு நடுவீட்டில் புதைக்கப்பட்டுதுள்ளதாக கேள்விப்பட்டு அந்த குழந்தையின் உறவினர்கள் போலீசில் புகார்கொடுத்துள்ளனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்டு போலீசார் அவரது பெற்றோர்களிடம் விசாரித்தனர்.

 

அந்த விசாரணையில் அந்த சிறுமியின் தாய் எனது மகள் ''தாரா'' தீராத உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றி அவதிப்பட்டு வந்தாள். எனவே அவளை கருணை கொலை செய்துவிடுங்கள் என சிலர் கூறினர். அப்படி செய்தால்தான் உங்கள் அடுத்த குழந்தையாவது பிழைக்கும் என கூறினர் எனவே அவ்வாறு செய்தோம் என தெரிவித்துள்ளார்.

 

 

 

அதேபோல் அந்த சிறுமியின் பாட்டி விசாரணையில், தாரா தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு நாங்கள் பார்க்காத மருத்துவமே இல்லை எனவே அந்த அவதியில் இருந்து அவளை மீட்கமுடியாமல் கருணைக்கொலை செய்து யாருக்கும் தெரியாமல் வீட்டில் புதைத்தோம். மேலும் அவளை புதைத்த இடத்தில் ஒரு கோவில் எழுப்பி கும்பிடலாம் எனவும் நினைத்தோம் என கூறியுள்ளார்.

 

இதனை அறிந்த போலீசார் அந்த வீட்டில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதாபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரேதபரிசோதனை அறிக்கையில் குழந்தையின் வயிற்றில் உணவின் சிறு பருக்கைகூட இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனை அடுத்து, நன்றாக இருந்த சிறுமியை வேண்டுமென்றே பட்டினிபோட்டு கொலை செய்துள்ளனரா? அல்லது மாந்த்ரீக கொலையா? என போலீசார் அவர்களை கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.