Skip to main content

தினசரி கரோனா எண்ணிக்கை புதிய உச்சம்; மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தும் மத்திய அரசு!

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

covid

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், இந்தியாவில் கரோனா பரவல் தொடங்கியது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கரோனா எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

 

இந்தியாவில் நேற்று (04.04.2021) ஒரேநாளில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 588 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும், மஹாராஷ்ட்ராவில் நேற்று ஒரேநாளில் 57 ஆயிரத்து 74 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகிவுள்ளது. ஒரு மாநிலத்தில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா உறுதியாவது இதுவே முதல்முறையாகும். டெல்லியிலும் நேற்று ஒரேநாளில் 4 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

 

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா அதிகமுள்ள 11 மாநில/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்