Skip to main content

"நிலைமையை தவறாகக் கையாண்டுவிட்டது மோடி அரசு" - சோனியா காந்தி குற்றச்சாட்டு!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

sonia gandhi

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சில மாநிலங்கள் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து புகார் எழுப்பியுள்ளன. இப்புகார்களை மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்தநிலையில், தேவையான அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை வழங்கவேண்டுமெனவும், கரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவும் கோரி, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நேற்று கடிதம் எழுதினார்.

 

இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாட்டில் கரோனா பரவல் நிலை குறித்து, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தடுப்பூசி ஏற்றுமதி, இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.

 

கூட்டத்தில் சோனியா காந்தி பேசியவை, "பரிசோதனை செய்வது, பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பது, தடுப்பூசி செலுத்துவது ஆகியவற்றிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கரோனா பாதிப்புகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் அரசு கண்டிப்பாக வெளியிட வேண்டும். முதலில் நாம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதன்பிறகே தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ, பரிசளிக்கவோ வேண்டும். மோடி அரசாங்கம், கரோனா நிலையை தவறாகக் கையாண்டுவிட்டது. தடுப்பூசியை ஏற்றுமதி செய்து, இந்தியாவில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட அனுமதித்துவிட்டது என சோனியா காந்தி தெரிவித்தார்.

 

மேலும், "தேர்தல் பிரச்சாரத்துக்கும், மத நிகழ்ச்சிகளுக்கும் கூடிய கூட்டங்கள் கரோனா பரவலை அதிகரித்துவிட்டது. அதற்கு, ஓரளவிற்கு நாமும் பொறுப்பு. இதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாட்டின் நலனை, உங்கள் சொந்த நலனுக்கு மேலாக வைத்திருங்கள்" எனவும் அந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.