Skip to main content

பாலியல் வன்கொடுமை செய்து தூக்கிலிடப்பட்ட சிறுமிகள்

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

lakhimpur kheri case; 2 girls passed away

 

உத்திர பிரதேசம் மாநிலத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் சிறுமிகள் இருவரின் உடல் கரும்புத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியது. அவர்களை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக சிறுமிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த கொலையை தற்கொலை போல சித்தரிக்க முயலுவதாக புகார் எழுப்பிய குடும்பத்தினர் கொலை செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். 

 

சிறுமிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடந்து விசாரணை செய்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்