Skip to main content

கேரளாவில் மழை நீடிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

Published on 13/08/2018 | Edited on 13/08/2018

 

kerala

 

கேராளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

கனமழையினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி முதல் கட்ட அறிக்கையை வெளியிட்டதில், கனமழையால் சுமார் 8000கோடி வரையிலான இழப்பு ஏற்பட்டுள்ளாதக தெரிவித்துள்ளனர். 

 

கேரளத்தில் ஒருவாரக்காலமாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருவதால் கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி, மல்லபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்டு எட்டு முதல் மழை, வெள்ளம், மண்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.

 

இந்நிலயில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கேராளாவில் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்