Skip to main content

கேரள வரதட்சணை கொடுமை- கணவருக்கு 10 ஆண்டு சிறை! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

Kerala dowry- Husband jailed for 10 years!

 

கேரளாவையே உலுக்கிய வரதட்சணை கொடுமை வழக்கில் இளம்பெண்ணின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரமன்- சஜிதா தம்பதியின் இளைய மகள் விஸ்மயா. ஆயுர்வேதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற விஸ்மயாவுக்கு 21 வயதில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் கிரண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது, 100 சவரன் நகை, 1 ஏக்கர் நிலம், 10 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூபாய் 10 லட்சம் மதிப்புகள் டொயோட்டோ யாரிஸ் கார் என கிரண்குமாருக்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணை கொடுத்துள்ளனர். ஆனால், வரதட்சணை போதாது எனக் கூறி பெரிய சொகுசு கார், அதிகமாக பணம் வேண்டுமென திருமணமான சில நாட்களிலேயே விஸ்மயாவைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார் கிரண்குமார். 

 

தினந்தோறும் அடித்தும், சூடு வைத்தும் துன்புறுத்தியிருக்கிறார் கிரண்குமார். பொறுத்துப் பொறுத்து பார்த்த விஸ்மயா தன் தந்தையின் இயலாமையை எண்ணி திருமணமான ஒரே ஆண்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்டுள்ள காயங்கள், துன்புறுத்தல்களை வாட்ஸ் அப் மூலம் உறவினருக்கு அனுப்பியிருக்கிறார். 

 

உறவினர் அழைத்துச் செல்வதாகக் கூறிய, அடுத்த நாளே விஸ்மயா தற்கொலை செய்திருக்கிறார். கேரள மாநில காவல்துறையின் தீவிர விசாரணைக்கு பின்னர், 42 சாட்சிகள், 102 ஆவணங்கள் மூலம் விஸ்மயாவின் தற்கொலைக்கு காரணம், கிரண்குமார் தான் என ஆதாரப்பூர்வமாக நிரூபித்ததைத் தொடர்ந்து, அவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

 

இன்று அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனக் கூறிய நீதிபதி, கிரண்குமாருக்கான தண்டனை இந்த சமுதாயத்திற்கு ஒரு உதாரணமாக இருக்கும் என கூறினார். அதன்படி, கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித் தண்டனை விவரங்களை அறிவித்தார். தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு ரூபாய் 12.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.