Published on 26/07/2021 | Edited on 27/07/2021

கர்நாடகாவில் நேற்று (26.07.2021) 1,606 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,937 பேர் கரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 28,36,985 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,21,434 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 36,405 ஆக உள்ளது. மேலும், நேற்று மட்டும் 31 பேர் கரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தமாக 36,405 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.