Skip to main content

ஐந்து பேர் பலி; கரோனா தடுப்பூசி நிறுவன விபத்துக்கு காரணம் என்ன? - புனே மேயர் தகவல்!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

serum institute

 

 

இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ எனும் கரோனா தடுப்பூசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

இந்நிலையில், சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சீரம் நிறுவனத்துக்கு 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

 

இந்த தீ விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தில் நடைபெற்ற வெல்டிங் பணியின்போது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக புனே மேயர் முர்லிதர் மோஹல் தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்