Published on 13/02/2019 | Edited on 13/02/2019

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கமானது பதிவாகி உள்ளது.
ஏற்கனவே நேற்று காலை வங்கக்கடலின் வடகிழக்கே 600 கிமீ தொலைவில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் சில இடங்களில் காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவில் அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.