Skip to main content

கபடி வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளர் 

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

delhi kabaddi player incident complaint filed coach 

 

கபடி வீராங்கனை ஒருவர் தன்னுடைய பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

டெல்லியைச் சேர்ந்த கபடி வீராங்கனை (வயது 27) ஒருவர் போலீசில் அளித்த புகார் ஒன்றில், "கபடி வீராங்கனையான நான் ஜோஹிந்தர் என்பவரிடம் 2012 ஆம் ஆண்டில் பயிற்சி பெற்றேன். அவர் தன்னை 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை புகைப்படமாக எடுத்து வைத்துக்கொண்டு அதனை என்னிடம் காட்டி, இந்த புகைப்படங்களை வெளியிடுவதாகக் கூறி 2018 ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் 40 லட்ச ரூபாய்க்கும் மேல் பெற்றுக்கொண்டதாக" புகாரில் தெரிவித்துள்ளார்.

 

புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட கபடி வீராங்கனையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் ஜோஹிந்தர் தலைமறைவாகி விட்டார். இவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்