Skip to main content

திருமணத்தில் தீபிகா படுகோன் அணிந்த மோதிரத்தை வைத்து ஒரு திருமணத்தையே நடத்தலாமா!!!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
deep


ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடியின் திருமணம் இத்தாலியில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.  இவர்கள் இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, திருமணம் முடிந்தது என்பதை வெளியுலகுக்கு தெரிவித்துள்ளனர். இந்த திருமணம் குறித்த முதல் புகைப்படமும் இவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள்தான். இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டவுடன் பாலிவுட் நடிகர், நடிகையர் என்று அனைவரும் தங்களின் வாழ்த்து மழைகளை பொலிந்தனர். அதேபோல ரசிகர்களும் அதை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனால் ட்விட்டரில் நேற்று இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள்தான் ட்ரெண்டாக இருந்தது. இந்த திருமண புகைப்படத்தை அடுத்து, இன்னுமொரு விஷயம் அந்த புகைப்படத்தில் வைரலாகி வந்தது. அது தீபிகா அணிந்திருந்த மோதிரம்தான். அந்த வைர மோதிரத்தின் விலைதான் அதை மேலும் வைரலாக்கியுள்ளது என்று சொல்லலாம். அந்த மோதிரத்தின் மதிப்பில் மும்பையில் ஒரு உயர்தர மிடில் க்ளாஸ் வீட்டின் திருமணத்தையே நடத்திவிடலாம் என்று சொல்கின்றனர். அப்படி என்ன அந்த மோதிரத்தின் விலை என்று கேட்கிறீர்களா? அந்த வைர மோதிரத்தின் விலை  ரூ1.5 கோடி முதல் ரூ. 2.3 கோடி வரை இருக்குமாம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புர்ஜ் கலீஃபாவை பார்த்து கண்கலங்கிய தீபிகா படுகோன்!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

ranveer singh starring 83 trailer featured on Dubai Burj Khalifa

 

1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து ‘83’ என்ற படத்தை இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கபில்தேவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். நடிகர் ஜீவா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடித்துள்ளார். அணியின் மற்ற வீரர்களாக தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்பட்டத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள படக்குழு, உலகின் மிக உயரமான துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ‘83’ படத்தின் ட்ரைலரைத் திரையிட்டுள்ளது. இதனைப் படக்குழுவினர் பார்த்து ரசித்தனர். அப்போது தனது காதலரான ரன்வீர் சிங்கை திரையில் பார்த்தவுடன் நடிகை தீபிகா படுகோன் கண்கலங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதற்கு முன்னர்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ரெட் சீ திரைப்படவிழாவில் ‘83’ படத்தைப் பார்த்த பார்வையாளர்கள், எழுந்து நின்று கை தட்டி தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

Next Story

பலகோடிக்கு இன்சூர் செய்யப்பட்ட தீப்வீர் திருமணம்...

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
deepveer


ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடியின் திருமணம் இத்தாலியில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.  இவர்கள் இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, திருமணம் முடிந்தது என்பதை வெளியுலகுக்கு தெரிவித்துள்ளனர். இந்த திருமணம் குறித்த முதல் புகைப்படமும் இவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள்தான். முன்கூட்டியே புகைப்படம் வெளிவராததற்கு காரணம் இந்த திருமணத்தில் யாரும் தங்களின் மொபைலில் இருந்து புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது விதி. யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதற்காக மொபைல் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீபிகா மற்றும் ரன்வீரே அவர்களது திருமண புகைப்படத்தை பதிவு செய்யப்பட்டவுடன் பாலிவுட் நடிகர், நடிகையர் என்று அனைவரும் தங்களின் வாழ்த்து மழைகளை பொலிந்தனர். அதேபோல ரசிகர்களும் அதை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனால் ட்விட்டரில் நேற்று இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள்தான் ட்ரெண்டாக இருந்தது. மேலும் இன்னுமொரு தகவல், ரன்வீர் மற்றும் தீபிகா வீட்டில் இருந்து திருமணத்திற்காக இத்தாலிக்கு நூறு பேருடன் சென்றதாகவும், இதனால் இந்த திருமணத்தை டெல்லியில் உள்ள ஒரு நிருவனத்தில் கோடிக்கணக்கில் இன்சூர் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமான விபத்து, ஓட்டலில் தீவிபத்து, குண்டு வெடிப்பு போன்றவைகளை குறிப்பிட்டு காப்பீடு செய்து உள்ளனர். காப்பீடு தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.