Skip to main content

இரண்டாம் கட்ட சோதனையில் இந்தியாவின் தடுப்பூசி...

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

covaxin enters second round trials

 

 

இந்தியாவின் கரோனா தடுப்பூசியான கோவாக்சின் இரண்டாம் கட்ட சோதனையில் நுழைந்துள்ளது. 

 

இந்தியாவில் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஹைதராபாத்தில் இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர். மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்து கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இந்த மருந்து வேலைசெய்யும் விதம் குறித்து விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றிபெற்ற சூழலில், இதனைக்கொண்டு மனிதர்களுக்கு சிகிச்சையளிக்கும் சோதனையை நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பும் ஜூலை மாதம் 23-ஆம் தேதி அனுமதி அளித்தது.

 

இதில், முதல் கட்டத்தில் 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் உடலில் கோவாக்சின் செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பங்கேற்றவர்களுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படாத நிலையில், கோவாக்சின் இரண்டாம் கட்ட சோதனையில் நுழைந்துள்ளது.  இதில், 12 வயதுடைய இளம் பருவத்தினர் முதல் 65 வயது முதியவர்கள் வரை சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரண்டாம் கட்ட சோதனையில் தடுப்பூசி முதல் நாளிலும், பிறகு 28-வது நாளிலும் இரண்டு முறை கொடுக்கப்பட்டு தன்னார்வலர்கள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்