Skip to main content

பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

nirmala sitharaman

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இதனையொட்டி அவர் இன்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தார்.

 

அதன்தொடர்ச்சியாக நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

 

இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்யவுள்ள நான்காவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்