Skip to main content

திணறும் கடவுளின் தேசம்... ஒரே நாளில் 3,400ஐ கடந்த தொற்று!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

fgh

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. வட மாநிலங்களை விட,  தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. 

 

இன்று 3, 402பேருக்கு தொடர்புகள் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,862 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 70,921 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,515 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 24,549 ஆக உள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்