Skip to main content

ப்ரமோத் முத்தாலிக் மீது சட்டப்படி நடவடிக்கை! - குமாரசாமி உறுதி

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

எழுத்தாளர் கௌரி லங்கேஷ் குறித்து அவதூறாக பேசிய ராமசேனா தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதியளித்துள்ளார்.
 

kumarasamy

 

 

 

கடந்த சனிக்கிழமை ஸ்ரீராம் சேனா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக், ‘கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சியின்போது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் காங்கிரஸ் அரசின் தோல்வியைப் பற்றி யாருமே பேச முன்வரவில்லை. ஆனால், கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். பலர் கௌரி லங்கேஷ் கொலை மரணம் குறித்து பிரதமர் மோடி பேசவேண்டும் என வலியுறுத்துகின்றனர். கர்நாடகாவில் ஏதோவொரு நாய் செத்துப்போனதைப் பற்றி மோடி ஏன் பேசவேண்டும்?’ என சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்.
 

ப்ரமோத் முத்தாலிக்கின் இந்த பேச்சை பொதுத்தளத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, ‘நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. அது முத்தாலிக்கோ அல்லது வேறு யாரோ, சட்டத்தை மீறுகிற மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவாக பேசுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்’ என உறுதிபட தெரிவித்துள்ளார். 
 

 

 

மூத்த பத்திரிகையாளரும், தீவிர இந்துத்வ எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ், கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு, கொலையில் ஈடுபட்ட முக்கியக்குற்றவாளி பரசுராம் வகாமாரே உட்பட ஆறுபேரைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.