Skip to main content

பத்தாம் வகுப்புக்கு மறுதேர்வு கிடையாது! - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

பத்தாம் வகுப்பு கணிதவியல் பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

 

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கின. இந்தத் தேர்வுகளின் போது 12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ஆம் வகுப்பு கணிதவியல் பாடங்களுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே லீக் ஆனதாக செய்திகள் வெளியாகின. முதலில் இந்த செய்தியை மறுத்த சி.பி.எஸ்.இ., பொருளியல் பாடத்திற்கு வருகிற 25ஆம் தேதியும், கணிதவியல் பாடத்திற்கு தேதி முடிவுசெய்தபின்னும் மறுதேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்தது.

 

மேலும், கேள்வித்தாள் லீக் ஆன விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்திவந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், கேள்வித்தாள் லீக் ஆன விவகாரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். 

 

 

15 நாட்களுக்குள் கணிதவியல் பாடத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் அனில் ஸ்வரூப், ‘லீக் ஆனதாக சொல்லப்பட்ட 10ஆம் வகுப்பு கணிதவியல் பாடத்தின் விடைத்தாள்களை முதற்கட்டமாக மதிப்பீடு செய்துள்ள நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, டெல்லி மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் சேர்த்து சம்மந்தப்பட்ட பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்போவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

புத்தகங்களைப் பார்த்து எழுதும் தேர்வு; விரைவில் அமல்படுத்த திட்டம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Plan to implement soon on open book examination

கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்தது. அந்த குழு. தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை அப்போது வெளியிட்டது. அதில், கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது. 

பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின்படி, புதிய முயற்சிகளை அவ்வப்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) எடுத்து வருகிறது. அந்த வகையில் சி.பி.எஸ்.இ, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியிட்ட புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், வரும் கல்வியாண்டில் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் கணிதம்,அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத சி.பி.எஸ்.இ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

Next Story

இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள்; மத்திய அமைச்சகம் அறிவிப்பு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Union Minister announced From now on, public examinations will be held twice a year

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் 2025 - 2026ஆம் கல்வியாண்டுகளில், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காகவும் தேசியக் கல்வி கொள்கையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 படிக்கும் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த தேர்வை மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது. மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.