Skip to main content

ஏ.டி.எம்.களில் பணம் இல்லை! - அரசு என்ன செய்யப்போகிறது?

Published on 17/04/2018 | Edited on 17/04/2018

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்ததைவிட, நாட்டில் தற்போது பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரிசர்வ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு நேரெதிராக நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் கிடைக்கவில்லை என்ற செய்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

ATM

 

அசாம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பிரச்சனை அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

 

 

வழக்கத்தை விட அதிகமான அளவிற்கு பணத்தை எடுத்திருந்தால் இந்த பற்றாக்குறை நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், பைசக்தி, பிஹூ மற்றும் இதர அறுவடைக்கால பண்டிகைகளின் காரணமாக, சில தினங்களுக்கு முன்னரே மக்கள் அதிகளவு பணம் எடுத்திருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என அரசு தரப்பு விளக்கியுள்ளது. 

 

இதுதொடர்பாக,ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சகம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியிருக்கிறது. அதில், மிக அதிகளவிலான பணப்பதுக்கல் குற்றங்கள் நடப்பது, மக்களை பீதிக்குள்ளாக்கும் என்பதால் அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அதிகாரிகள் மற்றும் வங்கி மேலதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் மத்திய நிதி அமைச்சகம் வழங்கியிருக்கிறது. 

 

 

அதேசமயம், ரூ.200 மதிப்பிலான ரொக்கம் வெளியிடப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இன்னமும் அதை வைக்க ஏதுவான ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்கப்படவில்லை என்பதும் இதற்கான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தங்களது அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட பணம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். இந்த நிலை ஓரிரு தினங்களில் சரியாகிவிடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதி பிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது. வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.

Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

இதுகுறித்து வங்கியின் நிர்வாகத் தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத் தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.