Skip to main content

மாணவர்களோடு சேர்ந்து பெற்றோரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் நீட் தேர்வு!

Published on 01/03/2018 | Edited on 01/03/2018

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், கடந்தகால நினைவுகள் மற்றும் தற்கால சிக்கல்கள் என ஒன்றிணைந்து, நீட் தேர்விற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை இப்போதே அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கியுள்ளன.

 

கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொள்ளச் சென்ற மாணவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தேர்வு வளாகத்திற்குள் செல்வதற்கு முன் பல கெடுபிடிகள் கையாளப்பட்டன. முழுக்கை சட்டைகள் அரைக்கை சட்டைகளாக கிழிக்கப்பட்டன. மாணவிகளின் அணிகலன்கள் கலையப்பட்டன. சில தேர்வு மையங்களில் மாணவிகளின் உள்ளாடைகள் வரை சோதனை நடத்தப்பட்டது. நீட் நடத்தப்படுவதற்கு முன்பே இத்தனை கொடுமை என்றால், தேர்வு எழுதும் மொழி உள்ளிட்ட பல விஷயங்களில் மாணவர்கள் குழம்பிப்போனார்கள்.

 

neet

 

நீட் தேர்வுக்கு எதிரான கண்டனக் குரல்கள் இப்போதும் எழுந்துகொண்டிருக்கும் சூழலில், வரும் மே 6ஆம் தேதி நீட் தேர்வு மீண்டும் நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதில் பல குழப்பங்களை சந்தித்து வருகின்றனர் பல மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும். இனிஷியல் அல்லது துணைப்பெயர், உடை அணியும் முறை, தேர்வு எழுதும் மொழி என பல குழப்பங்கள் அவர்களை வாட்டுகின்றன.

 

விண்ணப்பங்களில் விண்ணப்பதாரரின் பெயரில் Surname எனப்படும் துணைப்பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான வதந்தி சமீபத்தில் பரப்பப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் என அனைத்திலும் இனிஷியலைப் பதிவிடுவது வழக்கம். ஆனால், ஆதார் அட்டையில் தந்தையின் முழுப்பெயரும் இடம்பெற்றுள்ளதால் இனிஷியலா, முழுப்பெயருமா எனத் தெரியாமல் ஈ-சேவை மையங்களை நீட் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நாடி வருகின்றனர்.

 

இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள் முடிந்தவுடன் நீட் பயிற்சி மையங்களில் விடுப்பு இன்றி பயிற்சி அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

 

neet

 

ஏற்கெனவே, மன உளைச்சலைச் சந்தித்திருக்கும் மாணவர்கள் மீண்டும் ஒரு மிகப்பெரிய இக்கட்டான சூழலில் சிக்கித் தவிப்பதைப் பார்க்கமுடியாது. சமூக நீதியைப் பாழாக்கும் இந்த நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யவேண்டும் என்பதே கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரின் கோரிக்கையாக இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.