Skip to main content

மாணவியின் பரபரப்பு புகார்!  நிர்மலாதேவியை அடுத்து சிக்கும் கருணமகாராஜன்! மீண்டும் பாலியல் புகாரில் மதுரை காமராஜர் பல்கலைகழகம்

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
m

 

மாணவிகளை தவறானபாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி மற்றும் முருகன் கருப்பச்சாமி ஆகியோர் கைதுசெய்யபட்டு சிறையில் இருக்கும் நிலையில்,  பேராசிரியர் கலைச்செல்வன் மற்றும் உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் விசாரனையை தீவிரப்படுத்தாமல் இருவரை மட்டும் பலிகடா ஆக்குகிறார்கள்  என்று கைதான முருகன் குடும்பத்தார் குற்றச்சாட்டு வைக்கும் வேளையில், மதுரை காமராஜர் பல்கலையில் கவர்னர்,  நிர்மலாதேவி சம்மந்தபட்ட சி.சி.டி.வி மற்றும் வீடியோ ஆதாரங்களை முற்றிலும் அழித்ததற்கு முழுகாரணம் திரைப்படம் மற்றும்  மின்னனு ஆய்வு மைய பொறுப்பாளர் கருணமகாராஜன்தான் என்றும்  குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டு இருக்கும் போது,   தற்போது புதிதாக கருணமகாராஜன்  மீது இதழியல் பி.எச்.டி ஆய்வு மாணவி,  தன்னை கடந்த ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்ற பகீர் குற்றச்சாட்டை கூறி பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் மனு அளித்து   பெரும் பரபரப்புக்கு மீண்டும் மதுரை காமராஜர் பல்கலையை கொண்டு வந்துள்ளார்.

 

k

 

இதுகுறித்து புகார் தெரிவித்த மாணவியிடம் நாம்  பேசியபோது,  ”இங்கு நடப்பது எல்லாமே மிக மிக மோசமாக இருக்கு.  இந்த கருணமகாராஜன் எல்லா மாணவிகளிடமும் கையை பிடித்து தனக்கு கைரேகை பார்க்கதெரியும் என்று கையை பிடிப்பார்.  பின்பு அவர்களை அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்.  அப்படித்தான் என்னையும் பலமுறை முன்னாள் துணைவேந்தர் செல்லத்துறையை தனிமையில் பார்க்கவேண்டும் என்று எவ்வளவோ வற்புறுத்தினார்.    இங்கு இருக்கும் என்னை போன்ற மாணவிகளுக்கும் இதே நிலைமைதான்.  அப்போதுதான் பி.எச்.டி வாங்கமுடியும் என்ற நிலை இருக்கு.  ஒரு நிர்மலாதேவியைத் தானே பார்த்தீர்கள்.  இங்கு உயர் பதவியில் இருக்கும் நிர்மலாதேவிகள் திரைமறைவில் இருக்கிறார்கள் .

 

பெண்கள் அந்த விசயத்திற்கு அட்ஜஸ்ட் பண்ணாதான் உயர்படிப்பு  படிக்கமுடியும் என்ற நிலை எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்ததால்,  ஒரு வாரம் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.  பொறுத்து பொறுத்து  பார்த்த பிறகுதான் புகாருக்கே போனேன்’’என்று நம்மிடம் கூறினார்.

 

m

 

இதுகுறித்து பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த மற்றொரு மாணவி,  ‘’இந்த கருணமகாராஜனை பற்றி ஏற்கனவே இங்கு படிக்கும் மற்றொரு மாணவர் ஒருவர் பதிவாளர் இ.மெயிலில் இருந்து முதல் அமைச்சர்,  கவர்னர் மற்றும் பிரதமர் என அனைவருக்கும் இவர்கள் செய்யும் பாலியல் பிளாக்மெயில் மற்றும் படிப்பு சான்றிதழுக்கு லஞ்சம் எப்படியெல்லாம் வாங்குகிறார்கள் என பட்டியலிட்டு அனுப்பிவைக்க,  அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.


  பதிவாளர் இ.மெயிலில் இருந்து புகார் அனுப்பியதால் அந்த மாணவரை கண்டுபிடித்து பின் கைது செய்து பல்கலையில் இருந்து முற்றிலும் நீக்கபட்டார். அது தொடர்பாக வழக்கு நடைபெறுகிறது. இது இந்த குறுகிய காலத்தில் இரண்டாவது புகார்.  கருணை மகாராஜனும் உதவி பேராசிரியர் தான். இதழியல் திரைப்படதுறை தலைவராக இருப்பதற்கு தகுதியே இல்லாதவர் இவர்.  பதிவாளர் மற்றும் துனைவேந்தர் போன்ற உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு இதுமாதிரி அற்ப விசயங்களை செய்துதான் இந்த பதவியை அடைந்தார் நிர்மலாதேவி.  விசயத்தையே முழுவதும் தெரியாமல் எல்லாவற்றுக்கும் இருவர்தான் காரணம் என்று முழுபூசணிக்காயை மறைத்தவர்களுக்கு இதை மறைக்கத்தெரியாதா என்ன? நிர்மலாதேவியை தைரியமாக வெளிஉலகிற்கு கொண்டுவந்த அந்த ஐந்து மாணவிகளின் துணிச்சல்தான் கருணமகாராஜன் மீது நாங்கள் புகார் சொல்லுவதற்கு காரணம்.’’ என்று கூறினார்.

 

k

 
பல்கலை மாணவி புகார் குறித்து சம்மந்தப்பட்ட திரைப்பட மின்னனு ஆய்வு மைய பொறுப்பாளர் கருணமகாராஜனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,  ”இது சம்மந்தமாக என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்.  எனக்கு எதுவும் தெரியாது.  எதுவும் பத்திரிக்கைக்கு சொல்லவும் மாட்டேன். அப்படி பதில் வேண்டும் என்றால் பல்கலைக்கழகத்தில் எனக்கு மேல் உள்ளவர்களை கேட்டுக்கொள்ளுங்கள்” என்று முடித்துக் கொண்டார்.  

 

 பல்கலையில் பாலியல் தொடர்பான புகார்கள் சங்கிலி தொடர் போல  தொடரும்போல தெரிகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பல்கலைக்கழகங்கள்; தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Chennai University, Madurai Kamaraj University Financial Crisis

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

சென்னைப் பல்கலைக்கழகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமும் வெவ்வேறு காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியை  எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு தீர்வு காண வேண்டும் என்று இரு பல்கலைக்கழகங்களின் பணியாளர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண  தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் கடந்த டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அதேபோல், ஓய்வூதியர்களுக்கும் இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அங்குள்ள பணியாளர்கள் கடந்த 9 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுத் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

காமராசர் பல்கலைக்கழகத்தின் அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த மூலதன நிதி ரூ.300 கோடி ஏற்கெனவே செலவு செய்யப்பட்டு விட்ட நிலையில், பல்கலைக்கழக நிதி ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். ஆனால், அரசுத் தரப்பில் நிதியுதவி வழங்கப்படாத நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே குறித்த காலத்தில் ஊதியம் வழங்க முடியவில்லை. இப்போது இரு மாதங்களாக ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன், இம்மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க இயலாத நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் மோசமான நிலை ஆகும்.

இன்னொருபுறம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை முடக்கி வைத்திருப்பதால், அதன் விடுதிகளில்  மாணவர்களுக்கு உணவு  வழங்குவதற்கு கூட  தடுமாறும் நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேற்று உண்ணாநிலை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும் அரசுத் தரப்பிலிருந்து எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை வருமானவரித்துறைக்கு  சென்னை பல்கலைக்கழகம் ரூ.424 கோடி  வரி பாக்கி வைத்திருக்கிறது.  அதற்கான முதன்மைக் காரணம், சென்னைப் பல்கலைக்கழகங்களின் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியை தமிழக அரசு குறைந்து வந்ததுதான். அதனால் தான் சென்னைப் பல்கலைக்கழகம் ஓய்வூதிய நிதி உள்ளிட்டவற்றை ஊதியம் வழங்க பயன்படுத்தியது என்பதை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ரூ.500 கோடி வரை உபரி நிதி இருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியதுதான் நிதிநிலை அறிக்கை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையிலிருந்து பல்கலைக்கழகம் மீளவும் அரசு தான் உதவ வேண்டும். ஆனால், தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது. இது  பெரும் தவறு.

தமிழ்நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். பெருந்தலைவர் காமராசர் அவர்களால் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அவரது பெயரையே தாங்கி நிற்கும் கல்வி நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம். தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இந்த இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே,  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும்,  சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை  நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.