Published on 16/05/2018 | Edited on 17/05/2018

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் முடிவில் மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை வளைக்கப்போகிறது என்பதை நேற்றே நம் இணையதளத்தில் ’பேரம் தொடங்கியது தலைக்கு 50 சி’ என செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
அதனை உண்மையாக்கும் வகையில், இன்று கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முதல்வர் பதவியை ஏற்க உள்ளவருமான குமாரசாமி கூறியதாவது,
எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு பாஜகவினர் தலைக்கு 100 கோடி ரூபாய் கொடுப்பதாகவும், அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை வருமானவரித்துறையினர் கண்டும், காணமலும் உள்ளனர். ஆனால் எங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் யாரும் விலை போக மாட்டாளர்கள் என அவர் கூறினார்.