Skip to main content

அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை ஐகோர்ட் வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தும் டெல்லி சதி! வேல்முருகன் கண்டனம்

Published on 04/03/2018 | Edited on 05/03/2018
 Velmurugan

 

130 ஆண்டு கால வரலாறு கொண்ட, நாட்டின் முதலாவதும் முதன்மையானதுமான டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை டெல்லியின் சதி மற்றும் சூழ்ச்சியால் இடமாற்றம் செய்ய முயல்வதா? என்று கேள்வி எழுப்பி, இடமாற்றத்தை எதிர்ப்பது மாணவர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகமும்தான் என்றே எச்சரிக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்.

 

இது குறித்த அவரது அறிக்கை: ’’மருத்துவமனைகளுடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகளும் அமைக்கப்பட்டிருப்பது போல்தான் உயர் நீதிமன்றத்துடன் இணைந்து சென்னையில் அரசு சட்டக் கல்லூரியும் அமைக்கப்பட்டது. இதனால் அந்தத் துறைகள் சிறப்படைந்திருப்பது கண்கூடு.

இதைப் பொறுக்கமாட்டாமல் அந்தத் துறைகளைச் சீரழிக்கப் பார்க்கிறது டெல்லி.

‘நீட்’ தேர்வைத் திணித்து மருத்துவர்களும், நீதித் துறையில் தமிழையும் இட ஒதுக்கீட்டையும் மறுத்து சட்ட அறிஞர்களும் தமிழ்நாட்டில் உருவாகவிடாமல் தடுக்கிறது டெல்லி.

இந்த இழிசெயலின் தொடர்ச்சியாகத்தான் 130 ஆண்டு கால வரலாறு கொண்ட, நாட்டின் முதலாவதும் முதன்மையானதுமான சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்தே அப்புறப்படுத்திவிடப் பார்க்கிறது.

அதற்கு மாற்றாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலைக்கு ஒரு சட்டக் கல்லூரி எனப் படம் காட்டப்படுகிறது.

இதை ஊடகத்தில் செய்தியாக வெளியிட்டு, நரி வாலை விட்டு ஆழம் பார்ப்பது போல் நோட்டம் பார்க்கப்படுகிறது.

இந்தச் சதி மற்றும் சூழ்ச்சி, பட்டறிவும் சட்ட அறிவும் கொண்ட தமிழ் மாணவர்களுக்கு எட்டாமல் எப்படி? அதனால்தான் இந்தப் பொல்லாத்தனத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

சட்டக் கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள மற்ற சட்டக் கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  ஆனால் போராடும் அவர்கள் மீது காவல்துறையை ஏவி அடக்க முற்படுகிறது  அதிமுக அரசு.

இதை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இது நியாயமா, நீதியா என முதல்வர் பழனிச்சாமியையே கேட்கிறது.

போராடும் சட்டக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்குப் பக்கபலமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகமுமே இருப்பதை உறுதிப்படுத்தினோம்.

சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற சதி மற்றும் சூழ்ச்சி வலை 2008ஆம் ஆண்டிலேயே பின்னப்பட்டு அதற்கு முகாந்திரமாக சட்டக் கல்லூரி மாணவர்களிடையே பயங்கரமான வன்முறை மோதலையும் உருவாக்கி அரங்கேற்றினர்.

ஆனால் டெல்லியின் இந்தக் கயமைத்தனத்தை தமிழக-புதுவை நீதித்துறையே ஒருமித்துக் கண்டித்தது. இப்போது மோடியின் ஒன்றிய பாஜக அரசு தன் பினாமி அதிமுக அரசை வைத்து இதைச் செய்துவிடத் துடிக்கிறது.

அதனால், சட்டக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட அந்த மோதல் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சண்முகம் ஆணையம்தான் இந்த இடமாற்றத்தைப் பரிந்துரைத்ததாகக் கதைவிடுகிறது தமிழ்நாடு சட்டக் கல்விப் பணி இயக்ககம்.

ஆனால் 2009இல் தாக்கல் செய்த நீதிபதி சண்முகம் ஆணைய அறிக்கை அப்படி எதையும் கூறவில்லை.

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலிருந்து இளநிலை படிப்பை மட்டும் எடுத்து, அந்த இளநிலை சட்டப்படிப்புக்கான மூன்று புதிய கல்லூரிகளை சென்னை நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அமைக்க வேண்டும் என்றுதான் கூறியது நீதிபதி சண்முகம் ஆணையம்.

அப்படியிருக்க, பொய்யையும் புரட்டையும் கூறி டெல்லியின் ஏவலராகக் கேவலமான காரியத்தில் இறங்குவதேன்?

உண்மையில், பொய், புரட்டு மற்றும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் பாஜகவுக்கே கைவந்த கலை. அதனுடன் கைகோர்த்த தோஷம், அதிமுகவுக்கும் அது தொற்றிக்கொண்டதோ என்னவோ?

அதனால்தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே முதலுக்கே மோசமாகும் காரியத்தைக் கூட செய்யத் துணிகிறது அதிமுக அரசு.

பாஜகவை நம்பி சொந்தத் தமிழ்மக்களுக்கெதிரான காரியங்களைச் செய்தால், தமிழ்மக்களல்ல, அதிமுகதான் அதனால் மோசம் போகவேண்டிவரும் என்று எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

எனவே டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இடமாற்றத்தை உடனடியாகக் கைவிடுவதுடன், போராடும் மாணவர்களை அழைத்து அவர்களிடமும் இதனை உறுதிப்படுத்துமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.’’

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.