Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி - நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு

Published on 11/07/2018 | Edited on 11/07/2018
drinks


சென்னையில் நள்ளிரவில் நடக்கும் கேளிக்கைகள், மது விருந்துகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் தமிழக போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு சென்னையில் பாருடன் செயல்படும் யப் 1, யப் 2, யப் லைசன்ஸ்சுடன் செயல்படும் அனைத்து நட்சத்திர ஓட்டல்களின் பொதுமேலாளர் மற்றும் தலைமை செக்யூரிட்டி ஆபீசர் ஆகியோர் ஜூலை 11ஆம் தேதி ஆஜர் ஆகும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
 

 

 

அதன் பேரில் 70 பேர் நட்சத்திர ஓட்டல் சார்பில் கலந்துக்கொண்டனர். இதில் காவல்துறை சார்பில் ஏடிஜிபி ஆபாஷ்குமார், போதை தடுப்பு நுண்ணறிபிரிவு எஸ்.பி. ஆனிவிஜயா, எஸ்.பி தீபா மற்றும் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி புருஷோத்தமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் போதைப்பொருள் தடுப்பு பற்றியும், அதில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல் போலீஸ்சாருக்கு வழக்குவதை பற்றியும் அறிவுரை வழங்கப்பட்டது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

போதைக்காக வார்னிஷ் குடித்த 3 பேர் உயிரிழப்பு!

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருந்து, உணவகங்கள், மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. 

மது கடைகள் மூடப்பட்டுள்ளதால், கடைகளில் உள்ள மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கிறது. மேலும் மது கிடைக்காததால் குடிமகன்கள் குளிர்பானத்தில் கெமிக்கல் கலந்து குடித்து உயிரிழக்கும் சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VARNISH DRINK PERSON CAR DRIVER INCIDENT


இந்த நிலையில் மதுபானங்கள் கிடைக்காத காரணத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் பிரதீப், சிவசங்கர், கார் ஓட்டுநர் சிவராமன் ஆகிய மூவரும் போதைக்காக குளிர்பானத்தில் பெயிண்ட் அடிக்கப் பயன்படுத்தப்படும் வார்னிஷ் கலந்து குடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே போதைக்காக புதுக்கோட்டையில் குளிர்பானத்தில் சேவிங் லோஷனை கலந்து குடித்த மூன்று பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Next Story

பள்ளி விடுதியில் சமையல்காரர்களாக மாறிய மாணவர்கள்; 'போதை' ஊழியரால் பட்டினி கிடந்த அவலம்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

கிருஷ்ணகிரி அருகே, குடிபோதையில் படுத்துவிட்ட விடுதி சமையலரால் அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டினி கிடந்த அவலம் நேர்ந்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஒரு மாணவர் விடுதியும் உள்ளது. இதில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, படித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக சரவணன் (36) என்பவர் உள்ளார். சூளகிரியைச் சேர்ந்த முனிராஜ் (42), அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் சமையலர்களாக பணியாற்றி வருகிறார்கள். 

Students who became chefs at the school cafeteria


இரு சமையலர்களில் ஒருவரான அமிர்தலிங்கம், விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்று விட்டார். முனிராஜ் மட்டும் பணியில் இருந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை (ஜன. 27), வழக்கம்போல் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், விடுதி அறையிலேயே பாய், தலையணை போட்டு படுத்து அயர்ந்து தூங்கிவிட்டார்.


மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் பசியோடு வந்து பார்த்தபோது, முனிராஜ் போதையில் படுத்துக் கிடப்பதும், தங்களுக்கு உணவு சமைக்காமல் பட்டினி போட்டிருப்பதைக் கண்டும் விரக்தி அடைந்தனர். அவரை பலமுறை எழுப்ப முயன்றும் எழுந்திருக்க முடியவில்லை. பசியால் தவித்த மாணவர்கள், அவர்களாகவே தங்களுக்குத் தெரிந்த வகையில் சமைத்து, அப்போதைக்கு பசியாறினர். இதனால் பள்ளிக்குச் செல்வதில் தாமதம் ஆனது. 


வகுப்பறைக்கு தாமதமாக வந்த மாணவர்களிடம் ஆசியர்கள் விசாரித்தபோதுதான், மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தன. இதுபற்றி விடுதி காப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விடுப்பில் சென்றிருந்த சமையலர் அமிர்தலிங்கத்தை உடனடியாக பணிக்கு வரவழைத்தனர். அவர் வந்ததை அடுத்து, நேற்று வழக்கம்போல் விடுதியில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 


பணி நேரத்தில், பொறுப்பின்றி குடிபோதையில் இருந்ததோடு, மாணவர்களை பட்டினி போட்ட சமையலர் முனிராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.