Skip to main content

முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம் சாலைகள்... (படங்கள்)

Published on 21/06/2020 | Edited on 22/06/2020

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. கடந்த 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நடைமுறை அமலில் இருக்கும்.

 

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கடைகள் மதியம் வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. அலுவலகங்கள் இயங்குவது உட்பட, சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது. இந்த 12 நாளில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம் சாலைகள் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டன. 
 

 

சார்ந்த செய்திகள்