Skip to main content

அர்ஜூன ரணதுங்க விடுதலை

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
அர்

 

இலங்கை பெட்ரோலிய அமைச்சகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதான முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விடுதலை செய்யப்பட்டார். 5 லட்சம் ஜாமீனில் ரணதுங்கவை விடுவித்துள்ளது கொழும்பு நீதிமன்றம்.


ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போட்டியில் மகிந்த ராஜபக்சே,  ரணில் விக்ரமசிங்க தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் ரணிலின் அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த அர்ஜூன ரணதுங்க,  நேற்று மாலை கொழும்புவில் உள்ள பெட்ரோலிய துறையின் தலைமையகத்துக்கு சென்றுள்ளார். அலுவலகத்தில் உள்ள பொருள்களை எடுப்பதற்கும் அந்த அலுவலகத்தை ஒப்படைப்பதற்கும் சென்றுள்ளார்.  அலுவலகத்தில்  ஆவணம் ஒன்றை அவர் எடுக்க முயன்றபோது மகிந்த ஆதரவாளர்கள் அர்ஜுன ரணதுங்க மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.  இதில் ஏற்பட்ட பதற்றத்தால் அர்ஜுன ரணதுங்க பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.   துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இந்த சம்பவத்தால், அங்கு பதற்றம்  அதிகரித்துள்ளது. 


 இதையடுத்து இன்று கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டார்.  பின்னர் 5 லட்சம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
6 Rameswaram fishermen freed

ராமேஸ்வரம் மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருந்தனர். மேலும் அவர்களின் இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிக்கே வந்து சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த கைது சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய பிறகு கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் மீனவர்களின் இரு விசைப்படகுகளையும் நாட்டுடைமையாக்கி உத்தரவிட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிறையிலிருந்து வெளியே வந்தவருக்கு பாலாபிஷேகம்! 

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

Balabhishekam to the one who came out of prison!

 

மதுரை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த மருது சேனை கட்சியின் பிரமுகரும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளருமான ஆதிநாராயணனுக்கு, அவரது ஆதரவாளர்கள் குடம் குடமாய் பாலாபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் மருது சேனை கட்சியும் போட்டியிட்டது. வேட்பாளராக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஆதிநாராயணன் போட்டியிட்டார். அதே தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கடும் பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொலை வழக்கு காரணமாக மதுரை மத்திய சிறையில் ஆதிநாராயணன் அடைக்கப்பட்டார்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் ஆதிநாராயணனை முன்னிலைப்படுத்தி கலவரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்குறிப்பிட்ட கொலை வழக்கில் ஆதிநாராயணனுக்கு பிணை கிடைத்த நிலையில், நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர். அதுமட்டுமன்றி குடம் குடமாய் அவர் மீது பாலைக் கொட்டி அபிஷேகம் செய்தனர். மேலும் 50- க்கும் மேற்பட்ட ஆளுயர மாலைகளை அணிவித்து ஆதிநாராயணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.

 

மதுரை மத்திய சிறையில் இருந்து புறப்பட்ட அவரது ஆதரவாளர்களுடனான பேரணி, மதுரை தோப்பூர் சுங்கச்சாவடியைக் கடந்து எவ்வித தடையுமின்றி கார்களின் அணிவகுப்பு சென்றதை பொதுமக்கள் மிகுந்த வியப்புடன் பார்வையிட்டனர். இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.