Skip to main content

இலையா? சூரியனா? தென் மாவட்ட நிலவரம்! உளவுத்துறை EXCLUSIVE சர்வே! 

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

ddd

 

"உங்கள் மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு எவ்வாறு உள்ளது..?” என்பது குறித்த சர்வேயினை எடுத்து பிரத்யேக மின்னஞ்சலுக்கு விரைவாக அனுப்பிடல் வேண்டும் என எக்செல் ஷீட்டோடு அசைன்மெண்ட் கொடுத்தது உளவுத்துறை.

 

"இந்த சர்வேயில் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர், அவருடைய செல்வாக்கு, அவருக்கு இருக்கும் உட்கட்சி பிரச்சினைகளை மட்டுமே கேட்டிருந்தது. தி.மு.க. கூட்டணியின் வேட்பாளரைக் கூட அது கேட்கவில்லை. அதேவேளையில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. கூட்டணியினர் உள்ளிட்ட கட்சிகள் வாங்கவிருக்க வாக்குக்களைத் துல்லியமாக குறிக்கக் கூறியிருந்ததும் அடுத்தக்கட்ட திட்டத்திற்கான முன் தயாரிப்பு என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்'’ என்ற உளவுத்துறை தரப்பினர், கிடைத்த ரிசல்ட் குறித்து மெதுவாக பகிர்ந்துகொண்டனர்.

 

"10 தென் மாவட்டங்களில் மொத்தமுள்ள 58 தொகுதிகளில், தி.மு.க. கூட்டணிக்கு 14 தொகுதிகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 14 தொகுதிகளும் இழுபறியாக 30 தொகுதிகளும் உள்ளன எனவும் குறிப்பிட்டிருந்தோம்” என புன்னகைத்தனர். கடந்தமுறை இந்த 58 தொகுதிகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமமாக 29 தொகுதிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அ.ம.மு.க.வால் பாதிப்பு ஏற்படும் தொகுதிகள், ம.நீ.ம, நாம் தமிழர், புதிய தமிழகம் ஆகியவை தொகுதிவாரியாக வாங்கக்கூடிய ஓட்டுகள் ஆகியவையும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

 

தி.மு.க. கூட்டணியில் ஆண்டிப்பட்டி, கம்பம், ஆத்தூர், மதுரை மத்தி, பத்மநாபபுரம், விளவங்கோடு, திருப்பத்தூர், முதுகுளத்தூர், தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, பாளையங்கோட்டை, விருதுநகர் மற்றும் திருச்சுழி ஆகியனவும்; அ.தி.மு.க. கூட்டணியில் நெல்லை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ஸ்ரீவைகுண்டம், நாகர்கோவில், நத்தம், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மதுரை தெற்கு மற்றும் போடி ஆகியனவும் அந்தந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக உளவுத்துறை சர்வேயில் உறுதி செய்யப்பட்ட நிலையில்... பெரியகுளம், திண்டுக்கல், வேடச்சந்தூர், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, சோழவந்தான், மேலூர், கிள்ளியூர், கன்னியாகுமரி, குளச்சல், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம், திருவாடனை, பரமக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், கோவில்பட்டி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாங்குநேரி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகியன இழுபறி பட்டியலில் அடங்கும்.

 

"முதல்வரின் கவனத்திற்குச் செல்லும் உளவு ரிப்போர்ட்டில் இழுபறி என்று சொன்னால், அதன் முடிவு எப்படி இருக்கும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும்' என்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.