Skip to main content

புதிய மண்டையோடு நெபுலா!

Published on 25/10/2018 | Edited on 25/10/2018

ஒரு மிகப்பெரிய மண்டையோட்டின் குறுக்கே சில எலும்புகள் சிதறிக் கிடப்பதைப் போன்ற தோற்றத்தோடு புதிய நெபுலா ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ஸ்கல் அண்ட் க்ராஸ்போன் நெபுலா என்று பெயர் வைத்துள்ளனர்.

நெபுலா என்றால் நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், பிரபஞ்சத்தின் விளிம்பில் ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட பல்வேறு வாயுக்களும் தூசுகளும் நிறைந்த மேகக்கூட்டம் ஆகும். நெபுலா என்பது லத்தீன் மொழி வார்த்தை. இதற்கு பனிமூட்டம், புகை என்று அர்த்தம். இந்த நெபுலாக்களில் உள்ள வாயுக்களின் ஈர்ப்பில்தான் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன. நட்சத்திரங்களாக உருவாகாத வாயுக்கள் மற்றும் தூசுகள் இணைந்து கோள்களாக உருவாகின்றன.
 

skull and cross bones nebula



ஏற்கெனவே, எறும்பு நெபுலா, கழுகு நெபுலா, பூனைக்கண் நெபுலா, எஸ்கிமோ நெபுலா, சுருள் நெபுலா, குதிரைத்தலை நெபுலா என்று நெபுலாக்களின் தோற்றத்துக்கு ஏற்ப பல பெயர்களை வைக்கப்பட்டுள்ளன.

இப்போது கண்டுபிடித்துள்ள நெபுலா மிகச்சமீபத்தில் அதாவது, 10 முதல் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான புதிய நட்சத்திரக்கூட்டத்தின் தொடக்கமாகும். பூமியிலிருந்து சில பத்தாயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது இருக்கிறது என்கிறார்கள். இரண்டு படங்களை ஐரோப்பியன் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. மாண்ட்ரில் குரங்கின் மண்டையோடு போல பயங்கர உருவத்துடன் இது இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

 

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘இன்சாட் - 3 டி.எஸ்.’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
'Insat - 3DS' satellite successfully launched

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனை ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-14 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் நேற்று (16-02-24) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது. மேலும், இந்த ராக்கெட் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 14 ராக்கெட் இன்று (17-02-24) மாலை 5:35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 

2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.