Skip to main content

ஆயிரம் சொகுசு கார்கள், ஐம்பது ஃபிளைட்கள்....இன்னும் என்னவெல்லாம் நடந்தது அம்பானி வீட்டுத் திருமணத்தில்...

Published on 10/12/2018 | Edited on 10/12/2018

இந்த வருடத்தில் மிகப்பெரிய பாலிவுட் பிரபலங்களான ரன்வீர்& தீபிகா மற்றும் பிரியங்கா சோப்ரா& நிக் ஜோனஸ் ஆகியோரது திருமணம் நடைபெற்றது. பிரியங்கா சோப்ராவின் கணவர் ஹாலிவுட் நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பலர் எதிர்ப்பார்த்த திருமணம் என்றால் அது உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் திருமணம்தான். முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தி அம்பானியின் மகள் இஷா அம்பானி, இவர் தன்னுடைய சிறு வயது நண்பரான ஆனந்த பிரமல் என்பவரை வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். 
 

isha


இந்த திருமணத்திற்காக பல கோடிக்கணக்கில் செலவு செய்து உதய்பூர் அரண்மனையில் சங்கீத் நிகழ்ச்சி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த சங்கீத் நிகழ்ச்சிக்காக பல பிரபலங்கள், பல கோடிஸ்வரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்காக வருகை தந்த அம்பானியின் உறவினர்களுக்காகவும், பிரபலங்களுக்காவும் உதய்பூர் நகரிலுள்ள அனைத்து ஐந்து நட்சத்திர விடுதிகளும் கடந்த 8-9ஆம் தேதி வரை புக் செய்யப்பட்டது. பல சார்டர்ட் ஃப்லைட்டுகளும், விடுதியில் தங்கியிருப்பவர்களை நிகழ்ச்சி நடைபெறும் உதய்விலாஸுக்கு அழைத்து செல்ல ஆயிரம் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனும் இந்த விழாவை சிறப்பிக்க விருந்தினராக அழைக்கப்பட்டார்.
 

டிசம்பர்-8 சங்கீத் நிகழ்ச்சி முதலாம் நாள்
 

ambani


உதய்விலாஸ் நகரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அம்பானி மற்றும் பிரமல் குடும்பத்தினர் இணைந்து இந்திய கலாச்சாரம், பாரம்பரியத்தை சேர்ந்த கைவினை பொருட்களை கொண்ட அங்காடியை அங்கு நிறுவியிருந்தனர். நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட அனைவரும் அந்த அங்காடிக்கு சென்று ஷாப்பிங் செய்து மகிழ்ந்தனர். இதன் மூலம் இந்தியாவின் உயர்ந்த பாரம்பரியம் வெளிபடும் என்று இரு வீட்டாரும் தெரிவித்துள்ளனர். ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு, அந்த அந்த விடுதியிலேயே  பல வகையான ஆடம்பர உணவுகள் தயார் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளன. மெனுவின் இந்தியா முதல் வெஸ்டர்ன் என்று பல ரகங்கள் இருந்துள்ளது. அன்று மதியம் உதய்விலாஸில் ஹை டீ பார்டி ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு இந்திய டிரெஸ்ஸிங்கை ஸ்டைலை வைத்துள்ளனர். பின்னர், மஹா ஆர்தி எடுக்கும் பின்னணியில் பிசோலோ ஏரியை வைத்து மிகப்பெரிய பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.  அதனை அடுத்து இறவு உணவு, நட்சத்திரங்களுக்கு கீழே நடைபெற்றது. பாலிவுட் பிரபல பாடகர் அர்ஜித் சிங்கின்  இசை நிகழ்ச்சியும் இரவு முழுவதும் நடைபெற்றது.
 

டிசம்பர்-9 சங்கீத் நிகழ்ச்சி இரண்டாம் நாள்
 

hhhhhh


நிகழ்ச்சிக்கு வருகை தந்த உறவினர்களை, மேடைக்கு அழைத்து விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். பேஷன் வால்க் நிகழ்ச்சியும் உறவினர்களுக்குள் நடைபெற்றுள்ளது. ட்ரெஸ் கோடில், ஸ்மார்ட் கேசுயல்ஸ் சொல்லப்பட்டிருந்தது. மாலை பிரபலங்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்களான ஐஸ்வர்யா ராய், சாரூக் கான், சல்மான் கான், ரன்வீர், பிரியங்கா, தீபிகா போன்ற பலர் கலந்துகொண்டு இந்த திருமண விழாவை சிறப்பித்தனர். 
 

டிசம்பர் 7 முதல் 10 வரை நாளுக்கு 5100 பேருக்கு மூன்று வேளையும் அன்னதாணம் போட்டுள்ளனர். அதேபோல, இந்த பார்ட்டிக்கு வந்தவர்கள் யாரும் புகைப்படம், வீடியோ எடுக்ககூடாது என்றும், அவர்களின் சுதந்திரத்தை யாரும் பறிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். ஆனாலும், பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களின் வெளியாகின. 12 ஆம் தேதி அம்பானியின் ஆண்டிலியா வீட்டில் திருமணம் நடைபெற்ற பின்னர், இந்த ஜோடி தனியாக வசிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக வொர்லி என்னும் கடலோர பகுதியில், ஐந்து அடுக்கு பங்களா ஒன்றை 450 கோடிக்கு வாங்கி, புதுப்பித்துள்ளனர். 

 

 

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 

Next Story

அம்பானி இல்லத் திருமண விழா; மெய்சிலிர்த்த ரஜினி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
rajinikanth about ambani family pre wedding

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில், ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

கோலிவுட்டிலிருந்து ரஜினி தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார். இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஜாம் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். நிதாவும் முகேஷ் அம்பானியும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்கள் கைலாசத்தையும் வைகுண்டத்தையும் இந்த உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளது போல் உள்ளது. ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.