Skip to main content

நடராஜனின் டெத் சர்டிபிகேட் எங்கே? - கேட்ட நீதிமன்றம், குழப்பிய உறவுகள்

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

மூளைச் சாவடைந்த இளைஞரின் குடும்பத்தினரை மசிய வைத்து, விதிமுறைகளுக்கு மாறாக உறுப்புத்தானம் பெற்று, கல்லீரல்-கிட்னி பொருத்தப்பட்ட ம.நடராஜன், கடந்த மார்ச் 20-ந்தேதி குளோபல் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு எதிரான சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.

கடந்த 1994-ல் போலி ஆவணங்கள் கொடுத்து இறக்குமதி செய்த லக்சஸ் கார் விவ காரத்தில் ம.நடராஜன், சசிகலா உறவினர் பாஸ் கரன் ஆகியோருக்கு சி.பி.ஐ.கோர்ட் விதித்திருந்த இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர்நீதி மன்றமும் சில மாதங்களுக்கு முன் உறுதிசெய்திருந்தது.

 

sasikala-natarajan


இந்த நிலையில் லக்சஸ் கார் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் 19-ந்தேதி வந்தபோது, நடராஜன் மரணமடைந்து விட்டதால், அவரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். மரணத்தை உறுதி செய்யும் இறப்புச் சான்றிதழ் எங்கே என நீதிமன்றத்தில் கேள்வி எழுந்தபோது, அதனை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய தவறியதால், வழக்கிலிருந்து நடராஜனை விடுவிக்க மறுத்ததுடன் ஜூன் 27-ல் டெத் சர்டிஃபி கேட்டை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார் நீதிபதி மலர்மதி. நடராஜனின் இறப்பு சான்றிதழ் எங்கே? யாரிடம் இருக்கிறது? என ஆராயத் துவங் கியபோதுதான், அவரது மரணத்தை முறைப்படி பதிவு செய்யாதது அம்பலமாகியிருக்கிறது.

சென்னை- பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் நடராஜன் மரணமடைந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் பிறப்பு- இறப்பு பதிவுப் பிரிவில் ஆராய்ந்தோம். மருத்துவமனையின் ஆவணங்களின்படி மார்ச் 20-ந்தேதி இறந்திருக்கிறார் நடராஜன். அதை வைத்து பிறப்பு- இறப்பு ரெக்கார்டுகளை ஆராய்ந்தபோது, அன்றைய தினத்தில் 107 பேர் இறந்ததாக மாநகராட்சியின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதில், நடராஜன் பெயரில் ஒருவர் மட்டுமே இறந்ததாக பதிவாகியிருக்கிறது. அவர், சசிகலாவின் கணவர் ம.நடராஜன் அல்ல.

 

 


இதுகுறித்து மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது,"மருத்துவ மனையில் ஒருவர் இறந்தாலும், பிறந்தாலும் மருத் துவமனை நிர்வாகமே முறைப்படி மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து இறப்பு சான்றிதழை வாங்கிக் கொடுத்துவிடும் அல்லது இறந்துபோனவரின் ரத்த சொந்தமுள்ளவர்கள் டெத் சர்ட்டிஃபி கேட்டை மருத்துவமனையிலிருந்து பெற்று அவர் களே பதிவு செய்வதும் உண்டு. ஆனால், நடராஜன் விசயத்தில் இந்த இரண்டு வழிகளும் நடக்கவில்லை. இறந்துபோனவரின் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளுக்கும் அரசுத் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் இறப்புச் சான்றிதழ்தான் செல்லுபடியாகும். மருத்துவமனையின் சான்றிதழ் மட்டுமே போதாது. அப்படியிருந்தும் நடராஜனின் மர ணத்தை முறைப்படி பதிவு செய்யாததன் காரணம் தெரியவில்லை'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

நடராஜனின் உறவுகள் தரப்பில் விசாரித்த போது, ‘""நடராஜனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாள் பரோல் கேட்டு பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் மனு செய்திருந்தார் சசிகலா. இறப்புச் சான்றிதழ் இணைக்கப்படாததால் பரோலில் சிக்கல் எழுந்தது. உடனே மருத்துவமனை கொடுத்த இறப்புச் சான்றிதழின் ஒரிஜினலை சிறைக்கு அனுப்பி வைத்தனர். சிறை நிர்வாகம் ஏற்கவில்லை. அந்த சான்றிதழின் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசிடம் சிறை நிர்வாகம் கேட்ட நிலையில், எடப்பாடி அரசு உறுதி செய்த தால் சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது. பரோலில் தஞ்சை வந்து நடராஜனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சிறைக்கு சென்று விட்டார். மருத்துவமனையின் அசல் சான்றிதழ் அவரிடம்தான் இருக்கிறது. அந்த சான்றிதழ் இல்லாமல் மாநகராட்சியில் பதிவு செய்ய முடியாது. பதிவு செய்வதில் சசிகலாவும் ஏனோ அக்கறை காட்டவில்லை'' என்கின்றனர்.

 

 


மேலும் நாம் விசாரித்தபோது, ""நடராஜனின் குடும்ப உறவுகளுடனான தனது நெருக்கத்தை சசிகலா ரொம்ப வருஷத்துக்கு முன்பே குறைத்துக் கொண்டுவிட்டார். நடராஜனுக்கு வாரிசு இல்லாத தால் அவரது உடலுக்கு அவரது தம்பி ராமச்சந்திர னின் மகன் ராசுதான் கொள்ளிவைத்தார். அதனால் நடராஜனின் சொத்துகளுக்கு ஒரு வகையில் அவர் வாரிசாகி விடுகிறார். நடராஜனுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் சொத்துக்களுக்கு அவரது குடும்ப உறவுகளையே நாமினியாக நியமித்திருப்பதாக தெரிகிறது. நடராஜனின் இறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தால்தான் அந்த சொத்துகள் நாமினியின் பெயர்களுக்கு மாறும். அப்படி மாறுவதை சசிகலா விரும்பவில்லை. மாநகராட்சியில் இறப்பை பதிவு செய்துவிட்டால் அது பப்ளிக் டாகுமெண்ட்டாகிவிடும். நடராஜனின் உறவினர்கள் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அதைத் தவிர்க்கத்தான் இறப்பை பதிவு செய்யவில்லைங்கிற சந்தேகம் நடராஜன் குடும்ப உறவுகளுக்கு இருக்கிறது'' என்கிறார்கள்.

 

 


சசிகலா உறவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ""உறவுகள் சுமுகமாக இல்லை என்றாலும், கணவரின் மரணத்தை வைத்து அவர் விளையாடியதில்லை. மருத்துவமனை கொடுத்த அசல் சான்றிதழ் சிறை நிர்வாகத்திடம் இருக்கிறது. முறைப்படி பதிவு செய்வதில் யாரும் அக்கறை காட்டாததால், தேவைப்படும்போது பதிவு செய்துகொள்ளலாமென அவரும் இருந்துவிட்டாரே தவிர வேறில்லை'' என்கின்றனர் அழுத்தமாக.

இந்த நிலையில், நடராஜனின் இறப்புச் சான்றிதழை நீதிமன்றம் கேட்டிருப்பது அவரது குடும்ப உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனையின் அசல் சான்றிதழை சசிகலா விடமிருந்து வாங்கி முறைப்படி பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நடராஜனின் உறவுகள்.
 

 

 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.