Skip to main content

செங்கொடியின் கீழ் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி!

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

ஒற்றுமை வெற்றி தரும் என்பதை விவசாயிகள் நிரூபித்திருக்கிறார்கள். விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டிருப்பதாக மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்தார். விவசாயிகள் தங்களுடைய ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

 

ஆறு நாட்கள்… 180 கிலோ மீட்டர்… நாசிக்கில் சிறு ஊற்றாக தொடங்கியது அந்த செங்கொடி பேரணி.

 

Kisan

 

பின்னர் அது ஒரு கங்கையைப் போல பெருக்கெடுக்கத் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கமான ஏஐகேஎஸ் சார்பில் மகாராஸ்டிரா விவசாயிகளைத் திரட்டி ஏற்பாடு செய்யப்பட்டது அந்தப் பேரணி.

 

மும்பையை நோக்கி நடைபயணமாக புறப்பட்ட அந்தப் பேரணி சிறுகச்சிறுக மாபெரும் சிவப்பு நதியாக பெருக்கெடுத்தது. அவ்வளவு பெரிய ஜனத்திரள் போக்குவரத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் நகர்ந்தது. மும்பை போன்ற மாநகரத்துக்குள் அவ்வளவு பெரிய பேரணி நுழைந்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்?

 

ஆனால், நகர மக்களே சாலையின் இருபுறமும் திரண்டு தங்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து வரவேற்றனர்.

 

60 ஆயிரம் விவசாயிகளுக்கு தலைமையேற்று வழிநடத்திய விவசாயிகள் சங்க தேசிய செயலாளர் அசோக் அதுவாலே கூறுகிறார் கேளுங்கள்…

“பகல் நேரத்திலேயே மும்பைக்குள் நுழைய திட்டமிட்டிருந்தோம். ஆனால், அது, மும்பை நகர மக்களுக்கும், பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நள்ளிரவு நேரத்தில் நுழைய முடிவெடுத்தோம்.”

 

ஊர்வலத்தை வரவேற்ற பொதுமக்களில் ஒரு பெண்மணி இப்படி கூறினார்…

 

“விவசாயிகளை இப்படி தெருவில் இறங்கும்படி செய்தது மிகப்பெரிய அவமானம். நமது விவசாயிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறுவோம். சமீபத்திய தேசியவாதம் என்பது, ராணுவவீரர்களை பெருமைப்படுத்தாவிட்டால் ஆன்ட்டி இண்டியன்ஸ் என்கிறது. ஆனால் நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளை பாதுகாக்கத் தவறியவர்களையும் ஆன்ட்டி இண்டியன்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.”

 

 

ருசிதா மித்ரா என்ற 26 வயது என்ஜினியர் பெண்மணி கூறியது உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது…

 

“காய்ச்சி எடுக்கும் வெயிலில் இவ்வளவு பேர் இப்படி நடந்து வந்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் நிஜத்திலேயே எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்திருக்க வேண்டும்? விவசாயிகள் மகிழ்ச்சியாக வைத்திருக்காத நாடு முன்னேறவே முடியாது.”

 

Kisan

 

பேரணி மும்பைக்குள் நுழைந்தவுடனேயே, சிவசேனா, காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகளை சந்தித்து தங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தனர்.

 

சிவசேனா தலைவர்களில் ஒருவரான ஆதித்யா தாக்கரே கூறியது…

 

“நமது வண்ணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், உங்கள் இயக்கத்தை சிவசேனா முழுமையாக ஆதரிக்கிறது. நமது கோரிக்கைகள் கடன் சலுகை நமக்கு தேவையில்ல. பெரு முதாலாளி கிரிமினல்களுக்குத்தான் அது தேவை. நாம் வேண்டுவது முழுமையான கடன் ரத்து. சிவசேனா மற்ற கட்சிகளைப் போல பேச்சோடு நிற்காது. உங்கள் தோளோடு தோள் இணைந்து போராடும்” என்றார்.

 

திரிபுரா தோல்விக்குப் பிறகு, போராட்டக் காலம் முடிந்துவிட்டது. இனி வளர்ச்சியின் காலம் என்று பிரதமர் மோடி மார்தட்டினார். கம்யூனிஸத்திற்கு இந்தியாவில் என்ன வேலை என்று கேட்டார்கள். ஆனால், மும்மை நகரமே சிவப்பாகி இருக்கிறார்கள் விவசாயிகள்.

 

இப்போதும்கூட இந்த பேரணியின் உணர்வை கொச்சைப்படுத்தும் வேலையில் மகாராஸ்டிரா முதல்வர் பட்னாவிஸும் பாஜக ஆட்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

“பேரணியில் 70 சதவீதம் பேர் பழங்குடியினர்தான். விவசாயிகள் மிகவும் குறைவு” என்கிறார் முதல்வர் பட்னாவிஸ்.

 

“பேரணியில் மாவோயிஸ்ட்டுகள் பெரும்பான்மையாக கலந்துகொண்டிருக்கிறார்கள்” என்கிறார் அந்தக் கட்சியின் எம்.பி.

 

ஆனால், மாநில பாசனத்துறை அமைச்சர் விவசாயிகளைச் சந்தித்து 5 பேர் மட்டும் முதல்வரைச் சந்திக்கலாம் என்று அழைப்பு விடுத்தார்.

 

அதைத்தொடர்ந்து விவசாயிகள் சார்பில் 12 பேர் பிரதிநிதிகளாக முதல்வரைச் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. விவசாயிகள் அனைவரும் சட்டமன்றத்தை முற்றுகையிடும் முடிவு தள்ளிவைக்கப்பட்டது.

 

2014 ஏப்ரலில் இருந்து 2017 செப்டம்பர் வரை பாஜக அரசு பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த கடன் 2 லடசத்து 40 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதில் பாஜக அரசு பல்வேறு சாக்குப் போக்குகளையும், ரிசர்வ் வங்கியையும் காரணம் காட்டுகிறது.

 

பாஜகவின் விவசாயிகள் விரோதப் போக்கைக் கண்டித்தே இந்த மாபெரும் செங்கொடி பேரணி மும்பையில் முகாமிட்டிருக்கிறது.

 

மும்பை நகர மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சகோதர அமைப்பினரும் விவசாயிகள் தங்கியுள்ள மைதானத்தில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை செய்துகொடுக்கிறார்கள்.

 

மும்பையில் புகழ்பெற்ற உணவு பரிமாற்றக் குழுவினரான டப்பாவாலாக்களும் விவசாயிகளுக்கு உணவளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

 

மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு ஓரிரு நாட்கள் மக்களிடம் உணவைச் சேகரித்து வழங்குவதே எங்களுக்கு பெருமை சேர்க்கும் என்று டப்பாவாலா சங்கத்தின் தலைவர் கூறியிருக்கிறார்.

 

ஆகமொத்தத்தில் மும்பை நகரமக்கள் அனைவருமே விவசாயிகளின் பெருமையை உணர்ந்திருக்கிறார்கள். விவசாயிகளோ நகர மக்களின் வாழ்க்கையை பாதிக்காத அளவுக்கு பொறுப்பாக நடந்துகொள்கிறார்கள்.

 

Kisan

 

ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய மாநில அரசு, அவர்களை உதாஷீனப்படுத்துவதிலேய குறியாக இருந்தது.

 

விவசாயிகளோ, இந்தமுறை தங்களுடைய கோரிக்கைக்கு முடிவு காணாமல் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
 

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.