Skip to main content

அதிக மதிப்பெண் வாங்க புதிய வகை பேனா... காஷ்மீர் மாணவனின் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2018 | Edited on 19/04/2018
education

 

 

நாமும் சரி, நம் கல்வி முறையும் சரி மதிப்பெண்ணை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறோம். இதை மாற்ற யாரேனும் முயற்சித்தாலும் அது சாத்தியப்படுவது என்பது மிக,மிக கடினமாகிவிட்டது. கல்வி வியாபாரமானதிற்கும் அதுதான் காரணம், நம் நாட்டில் கல்வியின் நிலை மோசமானதிற்கும் அதுதான் காரணம். தேர்வில் அதிக வார்த்தைகள் கொண்டு பதில் எழுதத் தவறியதால் இரண்டு மதிப்பெண் குறைந்ததனால் விரக்தியடைந்த காஷ்மீர் சிறுவன், வார்த்தைகளை எண்ணக்கூடிய பேனா (counting pen) ஒன்றை உருவாக்கியுள்ளார். கடந்த  இரண்டு நாட்களாக அச்சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
 

education



இந்நிலையில் அந்த சிறுவனை வாழ்த்துவது என்பது நம் கடமைதான். ஆனால் அதே அளவிற்கு முக்கியமானது நம் கல்விமுறை எதை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதை ஆய்வது. எழுதும் பதிலில் உள்ள கருத்து சரியானதா என்பதை பார்க்காமல், அது எவ்வளவு நீளமாக உள்ளது, எத்தனை வார்த்தை உள்ளது என்பதின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதால்தான் மாணவர்கள் சாராம்சத்தை படிக்காமல் மொட்டை மனப்பாடம் செய்வது, இடத்தை நிரப்ப பாடல்கள், கதை என அனைத்தையும் எழுதிவைப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது மட்டுமில்லாமல் வார்த்தைகளில் கவனம் செலுத்தும் அளவிற்கு அவர்கள் மையக்கருத்தில் கவனம் செலுத்துவதில்லை.

ஒரு சில ஆசிரியர்களைத் தவிர, பெரும்பாலான ஆசிரியர்கள் பெரியதாக எழுதுவதையே ஊக்குவிக்கின்றனர். விடைத்தாள் திருத்தும் பணியில் இருக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் முழுமையாக படித்துவிட்டு மைய கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பெண் அளிப்பதைவிட, எழுத்து  அழகாக இருக்கிறதா, எத்தனை வண்ணங்கள் இருக்கிறது, பதில் பெரியதாக இருக்கிறதா என்பதைத்தான் பார்க்கிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். ஒரு தேர்வில் தோற்ற ஒருவர் உடனே ரீ-வேல்யேஷன் போட்டு பாஸ் ஆவதும், என்ன எழுதினோமென்றே தெரியாமல் பக்கம் பக்கமாக எழுதி பாஸ் மாணவர்களும் ஆயிரக்கணக்கில் உண்டு.  

 

education

 

அதெல்லாம் எப்படி, மைய கருத்தை தாண்டி அவைகளும் அவசியம்தான் என்பவர்களுக்கு....  மற்றவை அவசியம்தான். ஆனால் மையக்கருத்து என்பது அத்தியாவசியம். நாம் இன்றுவரை போற்றிப் புகழும் தலைவர்கள் பலரின் கையெழுத்து அழகாக இருந்ததில்லை. வண்ணம் மாற்றி, மாற்றி எழுதியதில்லை, தேவையான கருத்தைத் தாண்டி தேவையில்லாத கதைகளை எழுதியதில்லை. மாணவர்களை, மாணவர்களாக பார்ப்பதை விடுத்து தலைவர்களாகப் பார்ப்பதில்தான் இதன் தீர்வு உள்ளது. படித்து முடித்த பலருக்கும், குறிப்பாக பொறியியல் மாணவர்களுக்கு வேலை கிடைக்காததற்கு மொட்டை மனப்பாடம் செய்வதே காரணமாக உள்ளது. 

இந்த மொட்டை மனப்பாட கல்வியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாததே.   என்ன இருந்தாலும் இந்த கண்டுபிடிப்பிற்காக, இந்த சிறுவனை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். 

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை முயற்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Arrested old man attempted to incident

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.

Arrested old man attempted to incident

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் புதுச்சேரி அரசு, ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. கருணாஸும், விவேகானந்தனும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள விவேகானந்தன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குளிக்க பயன்படுத்தும் சோப்பைச் சாப்பிட்டும், துணியால் முகத்தை இறுக்கியும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.