கிளம்ப மறுக்கும் கிரண்பேடி! நாராயணசாமிக்கு தலைவலி!
இவ்விதழின் கட்டுரைகள்
சென்றவார இதழ்கள்
Next Story
’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து’ - திமுகவிடம் ஒரண்டை இழுக்கும் அதிமுக!
புதுச்சேரியில் ஆளுநர் தலையீட்டை தடுக்க மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கையில், 'பாஜகவின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.
புதுச்சேரி சட்டமன்றத்திற்கே நிபந்தனை விதிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் கண்ணியத்தை முற்றிலும் சீர்குலைக்கும் மிக மோசமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும். பாஜகவில் உள்ள மூன்று பேரின் தனிமனித நலனுக்காக, புதுச்சேரி வாழ் ஏழரை லட்சம் மக்களின் பொது நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநருக்கு அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா? என்பதை மத்தியில் உள்ள பாஜக அரசு மதிப்பீடு செய்ய வேண்டும். இதுபோன்று திட்டமிட்டு உருவாக்கிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகாரக் குழப்பங்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தி.மு.க ஆட்சியில் இருந்தபோது தனி மாநில அந்தஸ்து கோராத நிலையில் தற்போது நாடகம் ஆடுவதாக அதிமுக குற்றசாட்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம், "மத்தியிலும் மாநிலத்திலும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து பெறுவது சம்பந்தமாக எந்தவொறு சிறு நடவடிக்கையும் திமுக எடுத்தது இல்லை. தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்கின்ற நிலையை அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் எடுத்து வருகின்றது.
இதில் ஆளும் அரசு ஒரு நிலைபாட்டை எடுத்து வரும் சூழ்நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற தனிநபர் தீர்மானங்களின் உண்மை நிலையை மூடி மறைத்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மக்களிடையே ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்துகின்ற விதத்தில் மாநில அந்தஸ்து சம்பந்தமாக அக்கறை கொண்ட கட்சியாக திமுக இருப்பது போன்ற தவறான தகவலை தெரிவத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை ஒருபோதும் வற்புறுத்தியது இல்லை" என்று கூறியுள்ளார்.
எந்த விவகாரத்திலும் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருப்பதில்லை என்பதையே அ.தி.மு.கவின் போட்டா போட்டி பேட்டி உணர்த்துவதாக புலம்புகின்றனர் புதுச்சேரிவாசிகள்.
Next Story
சட்டமன்றத்துக்குள் அனுமதிக்காவிடில் சபாநாயகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்: நியமன எம்.எல்.ஏக்கள்!
புதுச்சேரி பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக மத்திய அரசு நியமனம் செய்தது. ஆனால் இந்த நியமனம் விதிமுறைகள்படி நியமிக்கபடவில்லை எனக்கூறி சபாநாயகர் வைத்திலிங்கம் இவர்களுக்கு சட்டசபையில் இருக்கை ஒதுக்கவில்லை.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை நியமித்தது செல்லும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனடியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதையடுத்து சட்டசபைக்குள் செல்ல முயன்ற நியமன எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று ஆளுநர் கிரண்பெடி காலாப்பட்டில் உள்ள சாசன் கெமிக்கல் தனியார் மருந்து தொழிற்சாலையில் நிலத்தடி நீர் அதிக அளவு எடுக்கப்படுவதாகவும், கழிவுநீர் சுத்திகரிப்பு முறையாக நடைபெறவில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்ததையடுத்து அங்கு ஆய்வு நடத்தினார். பின்னர் கடற்கரை சென்றவர் தூய்மை பணியை மேற்கொண்டார்.
அப்போது கிரண்பெடி நிருபர்களிடம், "நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளரை நியமன எம்.எல்.ஏ.க்கள் அணுகலாம். சட்டப்பேரவைக்கு அவர்கள் செல்லலாம். அவர்களுக்கு அங்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரலாம்" என்று கூறினார்.
அதையடுத்து நேற்று பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி 3 பேரும் சட்டசபைக்கு சென்று சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரை சந்தித்து, உயர்நீதிமன்ற உத்தரவு நகலை கொடுத்து, தங்களை சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாமிநாதன், மத்திய அரசு நியமித்த நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் சட்டசபைக்குள் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆனாலும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு தடை ஏதும் விதிக்கவில்லை. இதன் மூலம் நியமன எம்.எல்.ஏ.,க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது மறைமுக பொருள். எனவே அதன்படி சட்டசபைக்குள் அனுமதிக்கக்கோரி முதல்வர், சபாநாயகர், கவர்னர், தலைமை செயலர், சட்டமன்ற செயலர் ஆகியோரிடம் நீதிமன்ற தீர்ப்பின் நகலை அளித்துள்ளோம்.
எங்களை சட்டசபைக்குள் அனுமதிக்காமல் தடுக்கக்கூடாது. தடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். வருகிற 16-ஆம் தேதி சட்டசபையில் அனுமதிக்கவில்லை என்றால், 19-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது சபாநாயகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்" என்றார்.
மீண்டும் நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் சூடு பிடித்துள்ளதால் அடுத்த வாரம் புதுச்சேரி அரசியலில் அனல் பறக்கும்.