Skip to main content

விரைவில் இணையும் நயன்தாரா-விஜய்சேதுபதி-சமந்தா 

Published on 30/11/2020 | Edited on 30/11/2020
kaathu vaakula irandu kaathal

 

 

நடிகர் சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத்தொடர்ந்து, விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்த நானும் ரௌடிதான் படத்தையும், சூர்யா நடிப்பில்  தானா சேர்ந்த கூட்டம் படத்தையும் இயக்கிருந்தார்.

 

இதன்பிறகு விக்னேஷ் சிவன்,  காத்து வாக்குல இரண்டு காதல் படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்தாண்டு காதலர் தினமன்று வெளியானது. ஆனால், கரோனா தொற்று பரவலால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதனால் ஏற்பட்ட இடைவெளியில், நெட்ப்ளிக்ஸ் தளத்திற்காக, பாவக்கதைகள் அந்தாலஜியை முன்னணி இயக்குநர்களோடு இயக்கினார் விக்னேஷ் சிவன்.

 

இந்தநிலையில், காத்து வாக்குல இரண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் இறுதியில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதியோடு நயன்தாரா, சமந்தா ஆகிய இரு முன்னணி நடிகைகள் இணைந்து நடிப்பதால், ரசிகர்களிடையே  பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.  மேலும், இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்