Skip to main content

“தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” - விக்ரம் பெருமிதம்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

vikram talk about ponniyin selvan movie

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.  இதனையொட்டி தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வந்தது. சென்னை, பெங்களூரு டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டுப் படக்குழுவினர் இன்று சென்னை திரும்பினார். 

 

அப்போது சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த விக்ரம், "தமிழகத்தை போலவே மற்ற மாநிலங்களில் இந்த  படத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அவர்களே படத்தையும்,பொன்னியின் செல்வன் நாவலையும் கொண்ட தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு நமது தமிழ் கலாச்சாரத்தை எடுத்து கூறுவது மிகவும் பெருமையாக இருந்தது. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என தெரிவித்தார். 

 

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் விழாவில், சோழர்களின் வீரம், பண்பாடு, கலாச்சாரம் என தமிழர்களின் பெருமையை விரிவாக விளக்கியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, பலரிடையே பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்