Skip to main content

“இது இல்லனா என் படம்லாம் வெளியவே வராது” - வெற்றிமாறன்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Vetrimaran said about editing

சென்னையில் திரைப்பட எடிட்டர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிங்கம் புலி, ஆர்.பி. உதயகுமார் நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 

இதில் பேசிய வெற்றிமாறன், “சினிமாவுல என்ன தப்பு வேணாலும் சூட்டிங் ஸ்பாட்ல பண்ணலாம். அதை எடிட்டிங்ல கரக்ட் பண்ணிட முடியும் என்கிற தைரியம் எனக்கு எப்போது இருக்கு. என்னை மாதிரி ஸ்டைல்ல படம் எடுக்குறவங்களுக்கு எடிட்டிங் ரூம் ஸ்ட்ராங்கா இல்லனா என் படம்லாம் வெளியவே வராது. அதுக்கு காரணம், நான் இரண்டு மிக சிறந்த எடிட்டர்களோடு வேலை பார்த்தது தான். ஒருவர் பாலு மகேந்திரா. நிறைய பேர் அவருடைய ஒளிப்பதிவு பத்தி பேசுவாங்க, இல்லனா ரைட்டிங் பத்தி பேசுவாங்க. 

ஆனால், நான் அவர் பக்கத்தில் இருந்து பார்த்ததில், அவருடைய மத்த திறமைய காட்டிலும் அவர் ஒரு தலைசிறந்து எடிட்டர்.  அவரிடம் வேலை பார்த்த உதவி இயக்குநர்கள் எல்லோருக்கும் எடிட்டிங் அறிவு கொஞ்சம் இருக்கும். என்னுடைய முதல் படத்தில் இருந்து எடிட்டர் என்கூடவே இருந்து என் படங்கள உருவாக்குறாங்க. இந்த இடத்துல என்னுடைய இடம் இருக்கனும்னு நினைச்சு இங்கு வந்துருக்கேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதலாளிகளிடம் இருந்து சினிமாவைக் காப்பாற்ற வேண்டும்” - அமீர்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 Aamir speech about editing

சென்னையில் திரைப்பட எடிட்டர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிங்கம் புலி, ஆர்.வி. உதயகுமார் நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 

இதில் பேசிய இயக்குநர் அமீர், “ஒரு இயக்குநருக்கு எடிட்டிங் அறிவு மட்டுமல்ல, இசை, சண்டை எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு எடிட்டருக்கு ஒரு இயக்குநருக்கான அறிவு ரொம்ப முக்கியம். ஒரு படம் தேறுமா தேறாதா என்று கண்டுப்பிடிப்பது ஒரு எடிட்டர்தான். ஆனால், இதைப் பல எடிட்டர் இதைச் சொல்வது கிடையாது. அதை அப்போதே இயக்குநரிடம் சொல்லிவிட்டால் அங்கேயே சரிசெய்ய முடியும். 

ஒரு இயக்குநருக்கு தன்னுடைய காதலியுடன் தனியறையில் இருக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை போல், எடிட்டிங் ரூமில் இருக்கும் போது கிடைக்கும். பருத்திவீரன் படத்தை 13 வெர்ஷன் எடிட் செய்தோம். தமிழ் சினிமாவே இப்ப அனாதையா கிடக்கு. ஒரு வருடத்திற்கு 250 படங்கள் உருவாகின்றன. ரசிகர்கள் எவ்வளவு படத்தைதான் பார்ப்பார்கள். ஒரு தனிநபர் கையில் சினிமா சென்றுவிட்டது. நானெல்லாம் இன்னும் இரண்டு வருடங்கள்தான் பார்ப்பேன். ஒன்னும் செட் ஆகவில்லை என்றால், மதுரைக்குச் சென்று அங்கேயே ஆட்களை பிடித்து படமெடுத்து கொண்டு அங்கேயே இருந்துவிடுவேன். 

எவ்வளவு செலவு பண்ணி படமெடுத்தாலும், தியேட்டர்கள் கிடைப்பதில்லை. க்யூப் நிறுவனங்கள் தொடங்கும் போது நம்மிடம் வந்து கெஞ்சுவார்கள். ஆனால், இப்போது அவர்கள் மோனோபோலி ஆகிவிட்டார்கள். இப்போது அவர்களைக் கேள்வி கேட்க முடியவில்லை. இப்போது தனித்தனி முதலாளிகளிடம் சினிமா மாட்டியிருக்கிறது. அதில் இருந்து சினிமாவைக் காப்பாற்ற வேண்டும். சினிமா இருந்தாதான் நாம் இருக்க முடியும்” எனப் பேசினார். 

Next Story

வெற்றியைக் கொண்டாடிய கருடன் படக்குழு (படங்கள்)

Published on 14/06/2024 | Edited on 14/06/2024

 

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அண்மையில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் கருடன்  பட சாக்ஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் படத்தின் ஹீரோ சூரி, சசிகுமார், டைரக்டர்  துரை செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்,  டைரக்டர்கள் வெற்றிமாறன், ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.குமார், ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 படங்கள் : எஸ்.பி.சுந்தர்