Published on 16/04/2020 | Edited on 16/04/2020
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து மே 3-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வந்து செல்லலாம். அதற்கும் பல நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
![vadivel](http://image.nakkheeran.in/cdn/farfuture/kE6APLAvY2jcRHAwJoL0Qwit6-U8HJI1g9iDKcDbTVE/1587012082/sites/default/files/inline-images/vadivel%20.jpg)
இந்நிலையில் நடிகர் வடிவேலு கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பாடல் பாடி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பாடியிருக்கும் வரிகள்:
"காடுகளை அழித்தோம்
மண் வளம் கெடுத்தோம்
நீர்வளம் ஒழித்தோம்
நம் வாழ்க்கை தொலைத்தோம்
வைரஸாய் வந்தே நீ
பாடம் புகட்டி விட்டாய்
இயற்கையை மதிக்கின்றோம்
இத்தோடு விட்டுவிடு" என்று பாடியுள்ளார்.
கொரோனாவை வெல்வோம் pic.twitter.com/rD486Yek42
— Actor Vadivelu (@VadiveluOffl) April 15, 2020