Skip to main content

ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வன் படம்!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

gfdhxf

 

அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள ‘தீனி’ படத்தினை பாபிநீடு பி வழங்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எல்.எல்.பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் பி.வி.எஸ்.என். பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் அனி ஐ.வி சசி இப்படத்தினை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல்களான ‘நான் கேட்டேன்...’ மற்றும் 'உயிர் சுழலுதே...' என்ற பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன.

 

‘தீனி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 26 அன்று ஜீ ப்ளெக்ஸ் (ZeePlex) தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் நாசர் சமையல் கலை வல்லுநராக நடித்துள்ளார். நடிகர் சத்யா முக்கியக் கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூன்று கதாநாயகிகளுடன் அசோக் செல்வன்... டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

ashok selvan movie tittle look poster released

 

'தெகிடி', 'ஓ மை கடவுளே' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அசோக் செல்வன் சமீபத்தில் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு, கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

ad

 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ரா.கார்த்தி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, ஷிவாத்மிகா ராஜா சேகர் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்தை Viacom18 ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து Rise East Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

 

இந்நிலையில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு தமிழில் 'நித்தம் ஒரு வானம்' என்றும் தெலுங்கில் 'ஆகாஷம்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாற்று இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

Next Story

"அப்படி ஒரு கெட்ட பழக்கம் என்னிடம் இருக்கிறது" - நடிகர் அசோக் செல்வன் 

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

bfndcnc

 

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதில் ரித்விகா, ரீயா, பானுப்ரியா, கே.எஸ் ரவிக்குமார், நாசர், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்  எழுத்தில் உருவான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நாவலின் தலைப்பை இப்படத்திற்கும் படக்குழு வைத்துள்ளது. தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள நடிகர் அசோக் செல்வன் தன்னுடைய கதாபாத்திர தேர்வு குறித்து நமக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் கூறியபோது....

 

"இந்த கதையை படிக்கும்போது எனக்கு எல்லா கதாபாத்திரங்களும் பிடித்து விட்டது. எல்லா கதாபாத்திரங்களும் நமக்கு நெருக்கமாக தொடர்புப் படுத்திக்கொள்ளும்படி இருந்ததால் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. பொதுவாக என் கதாபாத்திரம் தெரிந்த பிறகு நான் ஸ்க்ரிப்டை படித்தால் என் கவனம் முழுவதும் என் கதாபாத்திரத்தின் மீதே இருக்கும். அப்படி ஒரு கெட்ட பழக்கம் என்னிடம் இருக்கிறது. அதனால் முடிந்த வரை என் கதாபாத்திரம் தெரியாமலேயே முழு ஸ்க்ரிப்டை படிக்கிறேன்" என கூறியுள்ளார்.