Skip to main content

கத்தி முனையில் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் - இருவர் கைது

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

tamil actress jewels theft issue case

 

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் துணை நடிகை ஒருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் இருவர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அத்துடன் அந்த நடிகையின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையையும் பறித்து சென்றுள்ளனர். மேலும் அவரை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நடிகை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரான  ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டாவது நபர் அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது.

 

இதனை தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் துணை நடிகையின் வீட்டிற்கு சென்று பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்ததுடன் கத்தியை காட்டி அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் பின்பு இருவரையும் கைது செய்த காவல்துறையினர்  அவர்கள் மீது ஐ.பி.சி. சட்ட பிரிவு 376 மற்றும் 397 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். இதையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட  நகை மற்றும் பணம் மீட்கப்பட்டு துணை நடிகையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்