Skip to main content

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படங்கள்!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

sivaranjaniyum innum sila pengalum won best movie award ciff19

 

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்தோ அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.  ஆண்டுதோறும் சினிமா துறையில் சிறந்த கலைஞர்கள் மற்றும் சிறந்த படைப்புகளுக்கு இவ்விழாவில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டிற்கான 19 வது சென்னை சர்வதேச திரைப்படவிழா கடந்த 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் அந்த நிகழ்வு நேற்றுடன்(6.1.2022)  நிறைவடைந்தது. இதில் 53 நாடுகளில் இருந்து 100 க்கு மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.

 

இவ்விழாவில், தமிழ் பிரிவில் சிறந்த படங்களுக்கான போட்டியில் கர்ணன், தேன், சேத்துமான், உடன்பிறப்பு, சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், இராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாளும், மாறா உள்ளிட்ட 11 படங்கள் இடம் பெற்றது. இதில் சிறந்த படங்களுக்கான முதல் பரிசு சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பரிசுத் தொகையான ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசுக்கு தேன் மற்றும் சேத்துமான் ஆகிய இரு படங்களும் தேர்வு செய்யப்பட்டு தல ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 

 

மேலும் இவ்விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவுக்கும், அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது பாடகர் சித் ஸ்ரீராமுக்கும் வழங்கப்பட்டது. அத்துடன் 'சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' படத்தில் நடித்த லட்சுமி பிரியாவுக்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அருமையான படம்; நம் நெஞ்சை விட்டு அகலாது" - ரஜினிகாந்த் பாராட்டு

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

rajinikanth Praised sivaranjiniyum innum sila pengalum

 

வசந்த் இயக்கத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், 'மயக்கம் என்ன' சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. சர்வதேச அரங்கில் பாராட்டுகளை பெற்ற இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது அளிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மதிப்பிற்குரிய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் சார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்குநர்களில் வஸந்த் மிக முக்கியமானவர். பாலசந்தர் சாருக்கு  மிகுவும் பிடித்தவர். இயக்குநர் வசந்த் இயக்கிய அனைத்து படங்களுமே நல்ல கருத்தாழமிக்க அருமையான படங்கள். அவர் இயக்கிய சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே மிக அருமையான படம் என்று சொன்னால் அது மிகையாகாது. 

 

பாரதி கண்ட புதுமை பெண்களான மூன்று பெண் கதாபாத்திரங்களை வைத்து மூன்று கதைகளாக்கி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இதை பார்த்தவர்கள் அனைவரும் இந்த படைப்பை பாராட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் இந்த படத்தை பார்த்த பிறகு அந்த மூன்று பெண் கதாபாத்திரங்களும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை. இது போன்று ஒரு அருமையான படத்தை அளித்த இயக்குநர் வசந்த அவர்களுக்கு என் மனமார்ந்த   வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

Next Story

"இவருக்கு இசை தேவையில்லை, இவரே ஒரு இசைதான்" - பிரபல பாடகரை பாராட்டிய அல்லு அர்ஜுன் 

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

allu arjun praised singer sid sriram

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்தது. குறிப்பாக சித் ஸ்ரீராம் பாடிய ஸ்ரீ வள்ளி பாடல் பெரும் ஹிட்டடித்தது.

 

இந்நிலையில், பாடகர் சித் ஸ்ரீ ராமை பாராட்டி நடிகர் அல்லு அர்ஜுன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், "எனது சகோதரர் சித் ஸ்ரீராம் ஒரு நிகழ்வில் 'ஸ்ரீவள்ளி' பாடலை மேடையில் பாடத் தொடங்கினார். அவரது குரலுக்குப் பின்னணியில் இசைக்கருவிகள் வாசிக்கப்படும் என்று நான் ஆர்வமுடன் காத்திருந்தேன். ஆனால் அவ்வாறு எதுவும் பின்னணியில் இசைக்கப்படவில்லை, அவர் குரல் மட்டுமே ஒலித்தது.  எவ்வித இசைக்கருவிகளும் இல்லாமல் அவர் பாடியதைக் கேட்டு நான் அந்த இசை வெள்ளத்தில் மிதந்தேன்.  இவர் குரலில் ஏதோ மாயம் உள்ளது என்பது மட்டும் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. இவருக்கு இசை தேவையில்லை, இவரே ஒரு இசைதான்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

சமீபத்தில் ஸ்ரீ வள்ளி பாடலுக்கு டேவிட் வார்னர், ஹ்ரித்திக் பாண்டிய உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல திரைப்பிரபலங்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.