Skip to main content

ஆசை வந்தால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன் - சாய்பல்லவி 

Published on 24/04/2018 | Edited on 26/04/2018
saipallavi


ஏ.எல்.விஜய் இயக்கத்தில், சாய்பல்லவி நடித்து ‘கரு’ என்ற பெயரில் தயாராகி தற்போது ‘தியா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பி சமயத்தில் கதாநாயகன் நாகசவுரியாவுக்கும், சாய் பல்லவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இதையடுத்து சில நாட்கள் கழித்து இப்பிரச்சினை குறித்து மறுப்பு தெரிவித்திருந்தார் சாய்பல்லவி. இந்நிலையில் மீண்டும் நடிகை சாய்பல்லவி இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து ஒரு பேட்டியில் பேசியபோது... "நாகசவுரியாவுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. படப்பிடிப்பில் எனது கதை, கதாபாத்திரம் பற்றி மட்டுமே யோசிப்பேன். அதை வீட்டில் வந்து 10 விதமாக நடித்து பயிற்சியும் எடுப்பேன். மற்றவர்களை பொருட்படுத்துவது இல்லை. டைரக்டரிடம் மட்டும் எனது நடிப்பு குறித்து விவாதிப்பேன். நான் நாகசவுரியாவிடம் பேசாமல் இருந்ததால் ஒருவேளை என்னை அவர் தவறாக புரிந்து இருக்கலாம். என்னால் யாரும் காயப்பட கூடாது என்று நினைப்பேன். நாகசவுரியா சிறந்த நடிகர். படப்பிடிப்பில் அமைதியாக இருப்பார். என் மீது புகார் கூறிய பிறகு அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவருடன் பேச முடியவில்லை. நாகசவுரியா மட்டுமின்றி வேறு எந்த நடிகருடனும் எனக்கு மோதல் எதுவும் இல்லை. நான் டாக்டருக்கு படித்து இருக்கிறேன். டாக்டர் தொழில் செய்ய வேண்டும் என்று எனக்கு எப்போதாவது ஆசை வந்தால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்" என்றார்.

சார்ந்த செய்திகள்