Skip to main content

"இதெல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லை" - மேடையில் பார்த்திபன் விளக்கம்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

parthiban speech at ponniyin selvan 2 press meet

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை (28.04.2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

அதற்காக இந்தியா முழுவதும் மும்பை, ஹைதராபாத், சென்னை என பல்வேறு இடங்களில் தீவிரமாக ப்ரோமோஷன் செய்தனர் படக்குழுவினர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில் மணிரத்னம், பார்த்திபன், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 

 

அப்போது பார்த்திபன் பேசுகையில், "மணிரத்னத்தின் உதவியாளர் என்னிடம் வந்து, சார்... முதல் பாகத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்க பேசியது வைரலானது. அதுபோல இந்த சந்திப்பிலும் ஏதாவது பேசுங்க... என்று சொன்னார். இப்படத்திற்காக படக்குழுவினர் ப்ரோமோஷன் செய்ததை விட வைரலாக பேச முடியுமா என தெரியவில்லை. லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ரூ.1000 கோடி அல்லது ரூ.500 கோடி வசூலிக்கும் என தெரியாமல் மணிரத்னம் போன்று ஒரு மகத்துவமான இயக்குநருடன் இணைந்துள்ளார். மணிரத்னத்தின் லட்சிய படத்துக்கு சுபாஷ்கரன் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம். 

 

மணிரத்னம் படத்தில் உழைப்பை கொட்டிருக்கிறார் என்பதை விட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் வார்த்தைகளை கொட்டிருக்கிறார். அது ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. அவர் இவ்ளோ பேசி நான் கேட்டதே இல்லை. நிறைய இடங்களில் அந்த நேரத்துக்கு ஏற்றாற்போல் பொய் சொல்வது என்னுடைய பாணி. அதையும் மணிரத்னம் ஃபாலோ செய்கிறார். அதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு. 

 

சில பேர் ஸ்டைல் பண்ணா மயிறு மாதிரி இருக்கும். ஆனால் விக்ரம் மயிரை வச்சுக்கிட்டே இவ்ளோ ஸ்டைல் பண்றாரு. மயிர் கூச்செரியும் காட்சிகள் என்று நாம் பயன்படுத்துவோம். கூஸ்பம்பஸ் (goosebumps) என்று சொல்லுவோம். மயிறு என்பது தூய தமிழ் வார்த்தை. கெட்ட வார்த்தை அல்ல. கெட்ட வார்த்தையாக அதை நாம் முடிவெடுத்து கொள்கிறோம். தங்களால் முடித்த ஒரு ஸ்டைலை தங்கலான் மூலம் செஞ்சுருக்குறாரு. இப்படத்தில் பல பேர் நடித்துள்ளனர். அவர்களுடன் ஒரு பெருமைமிகு, அந்த மீ... அதாவது நானாக இருப்பதில் மகிழ்ச்சி" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
case against vikram regards veera dheera sooran movie poster

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதையடுத்து சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அடுத்ததாக துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இப்படத்தில் இனைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து கடந்த விக்ரம் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதே நாளில் படத்தின் டைட்டில் அடங்கிய புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் தனது இரு கைகளிலும் அறுவா வைத்திருக்கும்படி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

case against vikram regards veera dheera sooran movie poster

இந்த நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகாரில், “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.