Skip to main content

"வெளியே பேசவோ கருத்து சொல்லவோ கூடாது" - சென்சார் போர்டு முன்னாள் அதிகாரி பக்கிரிசாமி அனுபவங்கள்!

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Pakkirisamy |Exclusive Interview|Censor Board|

 

முன்னாள் சென்சார் போர்டு அதிகாரி மற்றும் ஆவணப்பட இயக்குநர் பக்கிரிசாமி அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். தன்னுடைய பல்வேறு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். 

 

டி.என்.கிருஷ்ணன் கலைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சியான விஷயம். நாம் அறிந்தது வெகுஜன சினிமா தான். ஆனால் பலதரப்பட்ட சினிமாக்கள் இருக்கின்றன. நான் செய்தது ஆவணப்படம். ஆவணப்படங்கள் குறித்த புரிதல் இங்கு பலருக்கும் குறைவுதான். மேற்கத்திய உலகில் கமர்ஷியல் படங்கள் வந்தாலும் சீரியசான படங்களும் நிறைய வெளிவருகின்றன. இங்கு அதுபோன்ற படங்கள் குறைவாகவே வருகின்றன. அனைவரும் கமர்ஷியல் சினிமாக்களை நோக்கியே செல்கின்றனர். எனவே ஆவணப்படங்களுக்கான இடம் இங்கு அதிகம் இல்லை என்பதில் ஆச்சரியமில்லை. 

 

வெளிநாடுகளில் ஆவணப்படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்வார்கள். இங்கு அதற்கான மார்க்கெட் இல்லை. ஆவணப்படம் இயக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் முழு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சென்சார் அதிகாரிகள் ஒரு படத்தைப் பார்த்தால் அதுபற்றி வெளியே பேசக்கூடாது. அது பற்றிய கருத்தை நாங்கள் வெளியே சொல்லக்கூடாது. படம் எப்படி இருக்கிறது என்று எங்களிடம் நிறைய பேர் கேட்பார்கள். ஆனால் நாங்கள் சொல்ல மாட்டோம். படத்தின் தரத்தைப் பொறுத்து நாங்கள் சான்றிதழ் வழங்குவோம். 

 

ஒரு படத்தை இயக்குவதற்கு முன்பு சரியான ஆராய்ச்சி என்பது மிகவும் முக்கியம். தமிழ் சினிமாவின் தரம் தற்போது அதிகரித்து தான் வருகிறது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக நம்முடைய படங்களும் இருக்கின்றன. அந்தக் காலத்தில் ஸ்ரீதர் போன்றவர்கள் போட்ட விதை இது. ஆவணப்படங்களின் தரமும் தற்போது அதிகரித்தே வருகிறது. ’Something Like a War’  என்கிற ஆவணப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என் மனதிலிருந்து எப்போதும் நீங்காத படம் அது. ஆவணப்படங்களுக்காக மட்டுமே இப்போது நிறைய திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன.

 

ஆவணப்படங்களுக்கு இப்போது பல்வேறு வகைகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் ஆஸ்கர் பரிந்துரை வரை சென்றிருக்கின்றன. இதற்கு முன்பு நான் தேசிய விருது வாங்கியது அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் இப்போது தேசிய விருது வாங்கியிருக்கிறேன். இதுவரை மொத்தம் 4 தேசிய விருதுகளை நான் வாங்கியிருக்கிறேன். மக்களே மக்கள் குறித்து பேசுவது தான் இப்போதைய திரைமொழி ஆகும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்