Skip to main content

"கங்கனாவை பார்த்தால் அறைவேன்" - நடிகை ஆவேசம்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Pakistani actor Nausheen Shah says she wants to slap Kangana Ranaut

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர், மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

 

இதனிடையே முன்னாள் விமானப்படை விமானியாக 'தேஜஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்கள் அல்லாது தமிழில் பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 15 ஆம் தேதியன்று தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதில் பல கருது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் கங்கனா குறித்து பாகிஸ்தான் நடிகை தற்போது பேசியுள்ளார். அவர் கங்கனாவை நேரில் பார்த்தால் அறைவேன் என கூறியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், பாலிவுட்டிலிருந்து எந்த நடிகரை நீங்க பார்க்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கங்கனா ரணாவத்தை சந்திக்க விரும்புகிறேன். அப்படி சந்தித்தால் அவரை இரண்டு அறை அறைவேன். என் நாட்டைப் பற்றி அவர் சொல்லும் விதம், பாகிஸ்தான் ராணுவத்தைப் பற்றி அவர் நிறைய பொய் சொல்லும் விதம், அவருடைய துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். ஆனால் அவருக்கு சுத்தமாக எதைப் பற்றியுமே புரிதல் இல்லை. ஆனால் நாட்டைப் பற்றி பேசுகிறார். அதுவும் வேறொரு நாட்டைப் பற்றி. 

 

உங்கள் சொந்த நாட்டில் கவனம் செலுத்துங்கள், உங்கள் நடிப்பில் கவனம் செலுத்துங்கள், உங்கள் இயக்கத்தில் கவனம் செலுத்துங்கள். பாகிஸ்தானில் மக்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? பாகிஸ்தான் ராணுவத்தைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? எங்கள் ஏஜென்சிகளைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? அது எங்களுக்கே தெரியாது" என கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.